கோவை: கொரானோ வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவில் உள்ள இந்தியர்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் நோய் தொற்று பாதுகாப்பிற்காக வழங்கப்படும் மாஸ்க் கூட இல்லாமல் இருப்பதாக சீனாவிலிருந்து இந்தியா திரும்பியுள்ள அன்னூர் மருத்துவ மாணவி தெரிவித்துள்ளார்.
கோவை: கொரானோ வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவில் உள்ள இந்தியர்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் நோய் தொற்று பாதுகாப்பிற்காக வழங்கப்படும் மாஸ்க் கூட இல்லாமல் இருப்பதாக சீனாவிலிருந்து இந்தியா திரும்பியுள்ள அன்னூர் மருத்துவ மாணவி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்த சகோதரிகள் அனுஸ்ரீ மற்றும் அபிநயா ஸ்ரீ. இவர்கள் சீனாவில் உள்ள சாங்கி சீ புரோவின்ஸ் சியான் மாகாணத்தில் மருத்துவம் பயின்று வந்தார். இவருடன் முப்பதுக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் சீயான் தாங் மருத்துவ பல்கலைக்கழகத்தில் படித்து வந்த நிலையில், தற்போது அங்கு வேகமாக கொரானோ வைரஸ் பரவிவருவதால் அங்கு படித்த பெரும்பாலான மாணவர்கள் அங்கிருந்து இந்தியா வர மிகவும் சிரமப்பட்டு வந்ததாக கூறினார்.
இதுவரை இல்லாத வகையில் விமான சேவை அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டதால் தங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறிய மாணவி அனுஸ்ரீ, தனது தந்தையின் முயற்சியால் தற்போது இந்தியா வந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அங்கு தங்கியிருந்த போது கொரானோ வைரஸ் காரணமாக தெருக்களே வெறிச்சோடியதாகவும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, பொருட்களை வாங்க கடைகள் ஏதும் செயல்படாததால் உணவு தட்டுப்பாடு என்பது கடுமையான இருந்ததாக கூறினார். அத்துடன் கொரானோ வைரஸ் தடுக்க என் 95 மற்றும் சர்ஜிக்கல் மாஸ்க் ஆகியவை கிடைக்காமல் கடும் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் பெரும்பாலான மருந்து கடைகளில் தற்போது ஸ்டாக் இல்லாமல் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டதாக தெரிவித்தார்
தற்போது சீனாவில் இருந்து மலேசியா வழியாக திருச்சி வந்து கோவை வந்ததாக கூறிய மாணவிகள், விமான நிலையத்தில் வந்த போது தங்களை பரிசோதனை செய்து நோய் குறித்து எந்த அறிகுறியும் இல்லாததால் வீட்டிற்கு அனுப்பிவைத்ததாக தெரிவித்தனர்.
கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்த சகோதரிகள் அனுஸ்ரீ மற்றும் அபிநயா ஸ்ரீ. இவர்கள் சீனாவில் உள்ள சாங்கி சீ புரோவின்ஸ் சியான் மாகாணத்தில் மருத்துவம் பயின்று வந்தார். இவருடன் முப்பதுக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் சீயான் தாங் மருத்துவ பல்கலைக்கழகத்தில் படித்து வந்த நிலையில், தற்போது அங்கு வேகமாக கொரானோ வைரஸ் பரவிவருவதால் அங்கு படித்த பெரும்பாலான மாணவர்கள் அங்கிருந்து இந்தியா வர மிகவும் சிரமப்பட்டு வந்ததாக கூறினார்.
இதுவரை இல்லாத வகையில் விமான சேவை அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டதால் தங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறிய மாணவி அனுஸ்ரீ, தனது தந்தையின் முயற்சியால் தற்போது இந்தியா வந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அங்கு தங்கியிருந்த போது கொரானோ வைரஸ் காரணமாக தெருக்களே வெறிச்சோடியதாகவும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, பொருட்களை வாங்க கடைகள் ஏதும் செயல்படாததால் உணவு தட்டுப்பாடு என்பது கடுமையான இருந்ததாக கூறினார். அத்துடன் கொரானோ வைரஸ் தடுக்க என் 95 மற்றும் சர்ஜிக்கல் மாஸ்க் ஆகியவை கிடைக்காமல் கடும் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் பெரும்பாலான மருந்து கடைகளில் தற்போது ஸ்டாக் இல்லாமல் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டதாக தெரிவித்தார்
தற்போது சீனாவில் இருந்து மலேசியா வழியாக திருச்சி வந்து கோவை வந்ததாக கூறிய மாணவிகள், விமான நிலையத்தில் வந்த போது தங்களை பரிசோதனை செய்து நோய் குறித்து எந்த அறிகுறியும் இல்லாததால் வீட்டிற்கு அனுப்பிவைத்ததாக தெரிவித்தனர்.