திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் மற்றும் அவரது தாயார் கோவை அன்னூர் அருகே சாலை விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் மற்றும் அவரது தாயார் கோவை அன்னூர் அருகே சாலை விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையின் திருப்பூர் மாவட்ட செய்தியாளராக பணிபுரிந்து வந்தவர் ஆர்.கே ராஜசேகரன்(31). இவர் இன்று தனது தாய், அக்கா மற்றும் அக்கா குழந்தையுடன் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இருந்து அன்னூர் வழியாக மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது, இன்று மதியம் எதிரே வந்த அரசுப் பேருந்து திடீரென ராஜசேகரன் வந்த காரின் மீது மோதியது. இதில் காரில் பயணித்த ராஜசேகரின் தாயார் ஜமுனாராணி(55) சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து அருகே இருந்தவர்கள் ராஜசேகரன், அவரது தங்கை மற்றும் தங்கையின் குழந்தை ஆகியோரை கேஎம்சிஎச் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த ராஜசேகரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மீதமுள்ள இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பத்திரிகையாளர் மற்றும் அவரது தாயார் விபத்தில் சிக்கி பலியான பலியான சம்பவம் பத்திரிகையாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையின் திருப்பூர் மாவட்ட செய்தியாளராக பணிபுரிந்து வந்தவர் ஆர்.கே ராஜசேகரன்(31). இவர் இன்று தனது தாய், அக்கா மற்றும் அக்கா குழந்தையுடன் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இருந்து அன்னூர் வழியாக மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது, இன்று மதியம் எதிரே வந்த அரசுப் பேருந்து திடீரென ராஜசேகரன் வந்த காரின் மீது மோதியது. இதில் காரில் பயணித்த ராஜசேகரின் தாயார் ஜமுனாராணி(55) சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து அருகே இருந்தவர்கள் ராஜசேகரன், அவரது தங்கை மற்றும் தங்கையின் குழந்தை ஆகியோரை கேஎம்சிஎச் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த ராஜசேகரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மீதமுள்ள இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பத்திரிகையாளர் மற்றும் அவரது தாயார் விபத்தில் சிக்கி பலியான பலியான சம்பவம் பத்திரிகையாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.