திருப்பூர் அருகே கார் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் இளம் பத்திரிக்கையாளர் உயிரிழப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் மற்றும் அவரது தாயார் கோவை அன்னூர் அருகே சாலை விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் மற்றும் அவரது தாயார் கோவை அன்னூர் அருகே சாலை விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையின் திருப்பூர் மாவட்ட செய்தியாளராக பணிபுரிந்து வந்தவர் ஆர்.கே ராஜசேகரன்(31). இவர் இன்று தனது தாய், அக்கா மற்றும் அக்கா குழந்தையுடன் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இருந்து அன்னூர் வழியாக மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது, இன்று மதியம் எதிரே வந்த அரசுப் பேருந்து திடீரென ராஜசேகரன் வந்த காரின் மீது மோதியது. இதில் காரில் பயணித்த ராஜசேகரின் தாயார் ஜமுனாராணி(55) சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து அருகே இருந்தவர்கள் ராஜசேகரன், அவரது தங்கை மற்றும் தங்கையின் குழந்தை ஆகியோரை கேஎம்சிஎச் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.



பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த ராஜசேகரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மீதமுள்ள இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பத்திரிகையாளர் மற்றும் அவரது தாயார் விபத்தில் சிக்கி பலியான பலியான சம்பவம் பத்திரிகையாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...