திருத்தங்கள் செய்யப்பட்ட பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும்: கள் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி

கோவை: திருத்தங்கள் செய்யப்பட்ட பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்திட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு கள் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்தார்.

கோவை: திருத்தங்கள் செய்யப்பட்ட பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்திட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு கள் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்தார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் செய்தியாளர் சந்திப்பு இன்று கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு கள ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய நல்லசாமி, மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் வரும் டிசம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஆயத்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில், திருத்தங்களை செய்யாமலே தேர்தல் நடைபெறுவதாகவும் அதை திருத்திய பிறகே உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டுமெனவும் உள்ளாட்சித் தேர்தலில் கொள்கை முடிவுகள் எதுவும் எடுப்பதில்லை என்றும் தேர்தலில் சிற்றூராட்சி உறுப்பினர் முதல் மாநகராட்சி மேயர் பதவி வரை சுயேட்சை சின்னங்களை கொண்டே தேர்தல் நடைபெற வேண்டும் என்றார்.

1967க்கு பிறகு உள்ளாட்சிகளிடம் இருந்து பறிக்கப்பட்ட ஆரம்பக்கல்வி, ஆரம்ப சுகாதாரம், கால்நடை மேம்பாடு, வேளாண்மை துறைகள் மீண்டும் உள்ளாட்சிகளிடமே ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் அப்போது தான் ஒவ்வொரு உள்ளாட்சியும் ஒரு தன்னிறைவு பெற்ற குடியரசாக இருக்கும் என்று கூறினார்.

மேலும், கள் ஒரு போதை அல்ல அது ஒரு உணவு என்றும் கள் இறக்குவதும் அருந்துவதும் அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு அளித்துள்ள உரிமை, ஆனால் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கள் இறக்குவதற்குத் தடை உள்ளது என்றும் அந்த தடையை அரசு எடுக்க வேண்டும் என்னாகும் இல்லையெனில் 2020 ஜனவரி 21ம் தேதி முதல் கள் இறக்கும் போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெறும் என்று தெரிவித்தார்.

இந்தியாவில் விளையும் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய், கடுகு எண்ணெய் போன்ற எந்த எண்ணெய்க்கும் அரசு மானியம் வழங்காமலும் அவற்றை ரேசன் கடைகளிலும் விநியோகம் செய்வதில்லை என்று தெரிவித்த அவர், பல நாடுகளில் பெட்ரோலுடன் 85% எத்தனாலை கலந்து வாகனங்களுக்கு எரிபொருளாக இயக்குவது நடைமுறையில் உள்ளது என்றும் இந்தியாவில் மிக குறைந்த அளவே எத்தனால் பெட்ரோலுடன் கலந்து வாகனத்திற்கு எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது இது மாறினால் நன்மை பயக்கும் என்று அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...