திருப்பூர்: தமிழ்நாடு மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: தமிழ்நாடு மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 1998ம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு கள உதவியாளர் பணி வழங்கிட வேண்டும், 2008க்கு முன் பணிக்கு சேர்ந்தவர்களுக்கு தினக்கூலி 380 வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினர் கடந்த 1ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் உள்ள ஒப்பந்த பணியாளர்கள் தங்களை நிரந்தரப்படுத்தக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் தங்களது ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை அரசிடம் ஒப்படைக்க இருப்பதாக தெரிவித்தனர்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 1998ம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு கள உதவியாளர் பணி வழங்கிட வேண்டும், 2008க்கு முன் பணிக்கு சேர்ந்தவர்களுக்கு தினக்கூலி 380 வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினர் கடந்த 1ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் உள்ள ஒப்பந்த பணியாளர்கள் தங்களை நிரந்தரப்படுத்தக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் தங்களது ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை அரசிடம் ஒப்படைக்க இருப்பதாக தெரிவித்தனர்.