திருப்பூர் சந்தைகளில் பதுக்கப்படும் பெரிய வெங்காயம்? மாவட்ட வழங்கல் அலுவலர்கள் சோதனை

திருப்பூர்: திருப்பூரில் உள்ள சந்தைகளில் பெரிய வெங்காயம் பதுக்கப்படுகிறதா என்பது குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

திருப்பூர்: திருப்பூரில் உள்ள சந்தைகளில் பெரிய வெங்காயம் பதுக்கப்படுகிறதா என்பது குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.



நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், வியாபாரிகள் யாரேனும் வெங்காயத்தை அதிக அளவில் பதுக்கி வைத்து வியாபாரம் செய்கின்றனரா என அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் தென்னம்பாளையும் பகுதி மார்க்கெட்டில் வட்டார வழங்கல் அலுவலர் முருகன் தலைமையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வியாபாரிகள் அதிகபட்சம் 10 டன் அளவிற்கு வெங்காயம் வியாபாரத்திற்கு வைத்துக் கொள்ளலாம் எனவும் அதற்கு மேலுள்ள வெங்காயம் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனர். திருப்பூரில் உள்ள சந்தையில் வெங்காயம் கிலோ 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...