கோவையில் இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை; பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிப்பு

கோவை : தென் மேற்கு வங்ககடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கோவையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மேலும் பெரும்பாலான இடங்களில் மழை காரணமாக மின்சாரம் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

கோவை : தென் மேற்கு வங்ககடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கோவையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மேலும் பெரும்பாலான இடங்களில் மழை காரணமாக மின்சாரம் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக லேசாக பெய்து வந்த மழையானது, நேற்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழையாக பெய்தது.

குறிப்பாக தமிழகத்தில் கோவை உட்பட நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, பெரம்பலூர், திருவண்ணாமலை, கடலூர், திருநெல்வேலி, திருச்சி ,அரியலூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், கோவை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, நள்ளிரவு முதல் காந்திபுரம், சிங்காநல்லூர், பீளமேடு, சுந்தராபுரம், ராமநாதபுரம், வடவள்ளி, உக்கடம், வெள்ளலூர், சரவணம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

மேலும், கோவை மாவட்டம் முழுவதும் பெய்து வரும் கன மழையினால் ஆங்காங்கே சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...