கோவை‌யில்‌ பாதாள சாக்கடை மற்றும்‌ மனிதக்கழிவுகளை அகற்றுவதற்காக ரோபோட்‌ எந்திரம்

கோயம்புத்தூர்‌ : கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ பாதாள சாக்கடை மற்றும்‌ மனிதக்கழிவுகளை அகற்றுவதற்காக முதன்‌ முதலாக ரோபோட்‌ எந்திரத்தின்‌ செயல்பாட்டினை நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சா்‌ எஸ்‌.பி.வேலுமணி துவக்கிவைத்தார்.

கோயம்புத்தூர்‌ : கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ பாதாள சாக்கடை மற்றும்‌ மனிதக்கழிவுகளை அகற்றுவதற்காக முதன்‌ முதலாக ரோபோட்‌ எந்திரத்தின்‌ செயல்பாட்டினை நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சா்‌ எஸ்‌.பி.வேலுமணி துவக்கிவைத்தார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி, மேற்கு மண்டலம்‌, ஆர்‌.எஸ்‌.புரம்‌ மாநகராட்சி ஆண்கள்‌ மேல்நிலைப்பள்ளி, தெற்கு மண்டலம்‌, சலிவன்‌ வீதி, மாநகராட்சி மாரண்ண கவுடர்‌ உயாநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில்‌ மாண்புமிகு முதலமைச்சரின்‌ சிறப்பு குறைதாக்கும்‌ முகாம்‌ மற்றும்‌ அரசு நலத்திட்ட உதவிகள்‌ வழங்கும்‌ விழா மாவட்ட ஆட்சியர்‌ திரு.கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமில்‌ 3 நபர்களுக்கு இளநிலை உதவியாளர்‌ உடன்‌ தட்டச்சா்‌ பணியிடங்களும்‌, ஒருவருக்கு அலுவலக உதவியாளராகவும்‌, 23 நபர்களுக்கு துப்புரவு பணியாளா்களாகவும்‌, 2 நபர்களுக்கு இசை ஆசிரியராகவும்‌ ஆகமொத்தம்‌ 29 நபர்களுக்கு கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ கருணை அடிப்படையில்‌ வாரிசுதாரர்களுக்கான பணி நியமன ஆணைகளை நகராட்சி நார்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சா எஸ்‌.பி.வேலுமணி வழங்கினார்.

முன்னதாக, மனிதக்கழிவுகளை மனிதர்களைக்‌ கொண்டு அகற்றுவதற்கு மாற்றாக கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ முதன்‌ முதலாக பாதாளசாக்கடை கழிவுகள்‌ அகற்றும்‌ ரோபோ‌ எந்திரத்தை அவர் பார்வையிட்டார். மாநகராட்சியின்‌ வாயிலாக பொதுமக்களின்‌ பயன்பாட்டிற்காக எச்‌.பி.சி.எல் நிறுவனம்‌ ரூ.36 இலட்சம்‌ மதிப்பிலான ரோபோ‌ எந்திரத்தினை அமைச்சர முன்னிலையில்‌ மாநகராட்சிக்கு ஒப்படைக்கப்பட்டது. இந்த எந்திரத்தின்‌ செயல்பாட்டினை ஆர்‌.எஸ்‌.புரம்‌ காந்திபார்க்‌ பகுதியில்‌ அமைச்சா்‌ எஸ்‌.பி.வேலுமணி பின்னர் பார்வையிட்டார்.



மேலும்‌, மாநகராட்சியின்‌ ஐந்து மண்டலங்களுக்கும்‌ 5 எண்ணிக்கையிலான கொசுப்புழு ஒழிப்பான்‌ இயந்திரங்களின்‌ பணிகளையும் அமைச்சர் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவண் குமார் ஜடாவத் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...