வால்பாறையில் கஞ்சா கடத்திய மூவர் கைது

கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய மூவர் கைது செய்யப்பட்டனர்.

கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய மூவர் கைது செய்யப்பட்டனர். 

காவல்துறையின் உளவு பிரிவினருக்கு அதிகாலை இன்று 5 மணிக்கு இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததன் பெயரில், பல பகுதிகளில் வாகன சோதனை மேற்கொண்டனர். 



அதன் ஒரு பகுதியாக, ரொட்டிக்கடை பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் வீரம்மாள் தலைமையிலான குழுவினர் இரு சக்கர வாகனத்தில் மூன்று பேர் வந்ததை தடுத்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்கு பின் முரனாக சந்தேகப்படும்படி பேசியதால் அவர்களுடைய வாகனத்தை சோதனையிட்டதில் 250 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. பின்னர், மூவரும் கைது செய்யப்பட்டு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரனையில், அவர்கள் பழனியைச் சேர்ந்த சரவணன் (19), தமிழ்ச்செல்வன் (24) மற்றும் மதுரையைச் சேர்ந்த பிரேம்நாத் (19) என்று தெரிய வந்துள்ளது. 

மூவரும் விசாரனை்க்குப்பின் நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...