நீலகிரி : வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து நிலையில் நீலகிரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
நீலகிரி : வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து நிலையில் நீலகிரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த ஒரு வாரமாக தீவிரம் அடைந்து கன மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு நிலை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே சிறு மண் சரிவுகளும், பாறைகளும் மரங்களும் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்படும் நிலை உள்ளது.

இந்நிலையில், குன்னூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா செய்தியாளர்களிடம் பேசுகையில், வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் கொண்டு அப்பகுதியில் நடக்கும் மண்சரிவு ஏற்பட்டால் உடனடியாக ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு அகற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
அருவங்காடு பகுதியில் 5 அபாயகரமான மரங்களை அகற்ற நெடுஞ்சாலைத் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் தற்போது மழை பெய்து வருவதால் அகற்ற சிரமாக உள்ளதால், மழை நிற்கும் பட்சத்தில் அந்த மரங்கள் அகற்றப்படும் என்றார்.
மேலும், தொடர்ந்து மழை நீடிக்கும் பட்சத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த ஒரு வாரமாக தீவிரம் அடைந்து கன மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு நிலை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே சிறு மண் சரிவுகளும், பாறைகளும் மரங்களும் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்படும் நிலை உள்ளது.

இந்நிலையில், குன்னூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா செய்தியாளர்களிடம் பேசுகையில், வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் கொண்டு அப்பகுதியில் நடக்கும் மண்சரிவு ஏற்பட்டால் உடனடியாக ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு அகற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
அருவங்காடு பகுதியில் 5 அபாயகரமான மரங்களை அகற்ற நெடுஞ்சாலைத் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் தற்போது மழை பெய்து வருவதால் அகற்ற சிரமாக உள்ளதால், மழை நிற்கும் பட்சத்தில் அந்த மரங்கள் அகற்றப்படும் என்றார்.
மேலும், தொடர்ந்து மழை நீடிக்கும் பட்சத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா தெரிவித்தார்.