கோவை : கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் அவர்களிடம் 32 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
கோவை : கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் அவர்களிடம் 32 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் அவர்களிடம் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளைச் சோந்த பொதுமக்கள் 32 கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் சாலை வசதி, மின்விளக்குகள், குடிந் வசதி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர்.
இக்கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில், மண்டல உதவி ஆணையர்கள் ஏ.ஜே.செந்தில்அரசன், ம.செல்வம், உதவி ஆணையர் (வருவாய்) அண்ணாதுரை, உதவி ஆணையர் (கணக்கு) சரவணன், உதவி ஆணையர் (பணியமைப்பு) மோகன சுந்தரி, செயற்பொறியாளர் பார்வதி, செயற்பொறியாளர் மேற்கு மண்டலம் எஸ்.ரவிச்சந்திரன், நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மாநகர கல்வி அலுவலர் கே.பழனி, கணக்கு அலுவலர்கள் லட்சுமி பிரபா (குடிநீர் பிரிவு), மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் அவர்களிடம் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளைச் சோந்த பொதுமக்கள் 32 கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் சாலை வசதி, மின்விளக்குகள், குடிந் வசதி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர்.
இக்கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில், மண்டல உதவி ஆணையர்கள் ஏ.ஜே.செந்தில்அரசன், ம.செல்வம், உதவி ஆணையர் (வருவாய்) அண்ணாதுரை, உதவி ஆணையர் (கணக்கு) சரவணன், உதவி ஆணையர் (பணியமைப்பு) மோகன சுந்தரி, செயற்பொறியாளர் பார்வதி, செயற்பொறியாளர் மேற்கு மண்டலம் எஸ்.ரவிச்சந்திரன், நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மாநகர கல்வி அலுவலர் கே.பழனி, கணக்கு அலுவலர்கள் லட்சுமி பிரபா (குடிநீர் பிரிவு), மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.