கோவை : முத்துராமலிங்க தேவர் 112வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோவை ஒலம்பஸ் பகுதி 80 அடி சாலை மாகாளி அம்மன் கோவில் அருகே உள்ள முத்துராமலிங்க தேவர் உருவப்படத்திற்கு அரசியல் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
கோவை : முத்துராமலிங்க தேவர் 112வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோவை ஒலம்பஸ் பகுதி 80 அடி சாலை மாகாளி அம்மன் கோவில் அருகே உள்ள முத்துராமலிங்க தேவர் உருவப்படத்திற்கு அரசியல் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி தினத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் ஏராளமான மக்களும் அரசியல் தலைவர்களும் மரியாதை செய்வது வழக்கம்.
இந்த நிலையில், முத்துராமலிங்க தேவர் 112வது ஜெயந்தி விழா மற்றும் 57 குரு பூஜை விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் முழு உருவ சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதன் ஒரு பகுதியாக, கோவை ஒலம்பஸ் பகுதி 80 அடி சாலை மாகாளி அம்மன் கோவில் அருகே உள்ள முத்துராமலிங்க தேவர் உருவப்படம் மலர்களால் அலகரிக்கபட்டு இருந்தது. மேலும், அங்கு மருது பாண்டியர், வேலு நாச்சியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அ.தி.மு.க சார்பில் சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன், திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், பா.ஜ.க சார்பில் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், தேவர் பேரவை, புலி படை அமைப்பினர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் உதயகுமார், சக்திவேல், ராஜ்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி தினத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் ஏராளமான மக்களும் அரசியல் தலைவர்களும் மரியாதை செய்வது வழக்கம்.
இந்த நிலையில், முத்துராமலிங்க தேவர் 112வது ஜெயந்தி விழா மற்றும் 57 குரு பூஜை விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் முழு உருவ சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதன் ஒரு பகுதியாக, கோவை ஒலம்பஸ் பகுதி 80 அடி சாலை மாகாளி அம்மன் கோவில் அருகே உள்ள முத்துராமலிங்க தேவர் உருவப்படம் மலர்களால் அலகரிக்கபட்டு இருந்தது. மேலும், அங்கு மருது பாண்டியர், வேலு நாச்சியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அ.தி.மு.க சார்பில் சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன், திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், பா.ஜ.க சார்பில் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், தேவர் பேரவை, புலி படை அமைப்பினர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் உதயகுமார், சக்திவேல், ராஜ்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.