நீலகிரி : நீலகிரியில் உதகை, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் கனமழையுடன் குளிரும் நிலவி வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
நீலகிரி : நீலகிரியில் உதகை, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் கனமழையுடன் குளிரும் நிலவி வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் இம்மாதம் துவக்கம் முதல் குந்தா, குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளில் மழை பெய்து வந்தது. இந்நிலையில், கடந்த வாரம் சில நாட்கள் பெய்த கன மழையால் குந்தா போன்ற பகுதிகளில் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டது. சாலைகளில் மண் சரிவுகள் ஏற்பட்டதாலும், மரங்கள் விழுந்ததாலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடந்த 22ம் தேதி மிக அதிக கன மழை பெய்யும் என வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் இருந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். குந்தா பகுதிகளில் பலர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். ஆனால், மழை பெய்யாமல், அதற்கு நேர் மாறாக கடந்த நான்கு நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் வெயில் அடித்தது.

இந்த நிலையில், இன்று காலை முதல் குன்னூரில் கனமழை பெய்ததுடன் கடும் குளிரும் நிலவியது. இதன் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் இம்மாதம் துவக்கம் முதல் குந்தா, குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளில் மழை பெய்து வந்தது. இந்நிலையில், கடந்த வாரம் சில நாட்கள் பெய்த கன மழையால் குந்தா போன்ற பகுதிகளில் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டது. சாலைகளில் மண் சரிவுகள் ஏற்பட்டதாலும், மரங்கள் விழுந்ததாலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடந்த 22ம் தேதி மிக அதிக கன மழை பெய்யும் என வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் இருந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். குந்தா பகுதிகளில் பலர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். ஆனால், மழை பெய்யாமல், அதற்கு நேர் மாறாக கடந்த நான்கு நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் வெயில் அடித்தது.

இந்த நிலையில், இன்று காலை முதல் குன்னூரில் கனமழை பெய்ததுடன் கடும் குளிரும் நிலவியது. இதன் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.