திருச்சி : திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித் உடல் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
திருச்சி : திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித் உடல் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். குழந்தையை மீட்க கடந்த 4 நாட்களாக பல்வேறு மீட்புக்குழுவினர் தொடர்ந்து முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை.
சுர்ஜித்தை ரிக் இயந்திரத்தின் மூலம் மீட்கும் முயற்சி ஒருபுறம் நடைபெற்று கொண்டிருக்கும் போது, சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணறு சுற்றி உள்ள இடங்கள் அனைத்தும் காவல்துறையினர்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.
மேலும், ஆழ்துளை கிணறு அருகே அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவ குழுவினர், மற்றும் மீட்பு குழுவினருடன் ஆலோசனை நடத்தி வருவது அந்த இடத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், ஆழ்துளை குழிக்குள் இருந்து இரவு 10.30 மணியளவில் இருந்து சிறுவன் உடல் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசுவதாகவும் இதனால் குழந்தை சுர்ஜித் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.
இதனிடையே, குழந்தை சுர்ஜித்தின் உடலை அதிகாலை 4.30 மணியளவில் தீயணைப்பு படையினர் மீட்டனர். பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையின் சடலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
உயிரோடு குழந்தை சுர்ஜித் மீட்கப்பட வேண்டும் என தமிழகம் முழுவதும் பிரார்த்தனைகள் நடைபெற்ற நிலையில், சிறுவன் சடலமாக மீட்கப்பட்டது அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.