சிக்கன் விரும்பிகளே உஷார்..! திருப்பூரில் தீபாவளி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நோய்வாய்ப்பட்ட 225 கிலோ இறந்த இறைச்சி கோழிகள் பறிமுதல்

திருப்பூர் : திருப்பூரில் தீபாவளி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 225 கிலோ இறந்த இறைச்சி கோழிகள் பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், 4 பெண்கள் உட்பட ஐந்து பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் : திருப்பூரில் தீபாவளி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 225 கிலோ இறந்த இறைச்சி கோழிகள் பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், 4 பெண்கள் உட்பட ஐந்து பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

திருப்பூர் மருதாச்சலபுரம் பகுதியில் பண்ணையில் நோய்கள் வந்து இறந்த நாட்டுக்கோழிகளை விற்பனை செய்யப்படுவதாகத் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. 

இதனைத் தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர். 

அப்போது, விஜய் என்பவருக்கு சொந்தமான கோழி இறைச்சி கடையில் கோழி பண்ணைகளில் நோய் வந்து இறந்த கோழிகளை எடுத்து வந்து, மஞ்சள் கலர் தடவி விற்பனை செய்வது தெரிய வந்தது. 



இதனை தொடர்ந்து, அந்த கடையில் தீபாவளி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 225 கிலோ இறந்த இறைச்சி கோழிகளை பறிமுதல் செய்தனர். 

மேலும், அங்கு கோழி விற்பனையில் ஈடுபட்டிருந்த விஜய், காயத்ரி, அமுதா, லதா, இன்பவள்ளி உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்தனர். மேலும், இறந்த இறைச்சி கழிவுகளை எடுத்து சென்ற அதிகாரிகள், அவற்றை தீயிலிட்டு எரித்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...