கோவை : இடைத்தேர்தல் தோல்வியால் அடுத்து ஆட்சி அமைப்போம் என்ற திமுகவின் கனவு கோட்டை தகர்த்து எறியப்பட்டு உள்ளதாக பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
கோவை : இடைத்தேர்தல் தோல்வியால் அடுத்து ஆட்சி அமைப்போம் என்ற திமுகவின் கனவு கோட்டை தகர்த்து எறியப்பட்டு உள்ளதாக பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
கோவை மக்கள் சேவை மையம் சார்பில் பெண் ஓட்டுநர்களுடனான தீபாவளி கொண்டாட்டம் காந்திபார்க் பகுதியில் உள்ள மாரண்ண கவுடர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பெண் ஓட்டுனர்களை கவுரவிக்கும் விதமாக மக்கள் சேவை மையம் சார்பில் பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் பெண் ஓட்டுனர்களுக்கு புடவை,இனிப்புகளை வழங்கினார்.
பின்னர் அவர் கூறுகையில், ஆண்களுக்கு ஈடாக பெண்களும் துணிச்சலுடன் வானக ஓட்டுனர் பணி மேற்கொண்டு வருவதாகவும், பொதுமக்கள் பாராட்டும் வகையில் திறம்படச் செயலாற்றி வருவதாக தெரிவித்தார். இந்த பெண் ஓட்டுனர்களை கவுரவிக்கும் வகையில், இந்த தீபாவளி பரிசளிப்பு விழா நடத்தபட்டதாக கூறிய அவர், மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டங்கள், சொந்த வாகனம் வாங்குவதற்கான திட்டங்கள்,பெண் ஓட்டுனர்கள் சங்கம் அமைத்த்கிட வழிகாட்டுதல் உள்ளிட்டவை எடுத்துரைக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்று இருப்பதையடுத்து, நாங்கள் தான் ஆட்சி அமைப்போம் என்ற திமுகவின் கனவு கோட்டையை தகர்த்து உள்ளது என தெரிவித்தார்.
கோவை மக்கள் சேவை மையம் சார்பில் பெண் ஓட்டுநர்களுடனான தீபாவளி கொண்டாட்டம் காந்திபார்க் பகுதியில் உள்ள மாரண்ண கவுடர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பெண் ஓட்டுனர்களை கவுரவிக்கும் விதமாக மக்கள் சேவை மையம் சார்பில் பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் பெண் ஓட்டுனர்களுக்கு புடவை,இனிப்புகளை வழங்கினார்.
பின்னர் அவர் கூறுகையில், ஆண்களுக்கு ஈடாக பெண்களும் துணிச்சலுடன் வானக ஓட்டுனர் பணி மேற்கொண்டு வருவதாகவும், பொதுமக்கள் பாராட்டும் வகையில் திறம்படச் செயலாற்றி வருவதாக தெரிவித்தார். இந்த பெண் ஓட்டுனர்களை கவுரவிக்கும் வகையில், இந்த தீபாவளி பரிசளிப்பு விழா நடத்தபட்டதாக கூறிய அவர், மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டங்கள், சொந்த வாகனம் வாங்குவதற்கான திட்டங்கள்,பெண் ஓட்டுனர்கள் சங்கம் அமைத்த்கிட வழிகாட்டுதல் உள்ளிட்டவை எடுத்துரைக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்று இருப்பதையடுத்து, நாங்கள் தான் ஆட்சி அமைப்போம் என்ற திமுகவின் கனவு கோட்டையை தகர்த்து உள்ளது என தெரிவித்தார்.