கோவை : ஆசியா பசிபிக் மண்டலத்தின் பொருளாதார கூட்டு வணிக ஒப்பந்ததை கண்டித்து இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக செஞ்சிலுவை சங்கம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை : ஆசியா பசிபிக் மண்டலத்தின் பொருளாதார கூட்டு வணிக ஒப்பந்ததை கண்டித்து இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக செஞ்சிலுவை சங்கம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய அரசாங்கம், சீனா, ஜப்பான், தென்கொரியா, நியூசிலாந்து உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளோடு பொருளாதார கூட்டு வணிக ஒப்பந்தம் குறித்து பேசி வருகிறது. இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால், விவசாயம் சார்ந்த சந்தைப்பொருட்கள் பலவற்றின் மீதான இறக்குமதி வரி, நிரந்தரமாக பூஜ்ஜியத்திற்கு கொண்டு வரப்படும் என கூறப்படுகிறது.

இதன் மூலம், பல நாடுகள் தங்களது விவசாய விளை பொருட்களை, நம் இந்திய நாட்டில் வியாபாரம் செய்ய தயாராக உள்ள நிலையில், பால்பண்ணை, பருத்தி, தேயிலை, காபி, உள்ளிட்ட பணப்பயிர்கள் பயிரிடும் தோட்டத்துறைக்கும் அபாயகரமான நிலை ஏற்படும் என விவசாயிகளிடையே அச்சம் நிலவி வருகிறது.
இந்த ஒப்பந்தம் மூலம் நமது நாட்டு விவசாயிகளுக்காகவும், தொழிலாளர்களுக்காகவும் சாதகமாக அரசு செயல்பட்டால், வெளிநாட்டு பெரு நிறுவனங்கள் தேசிய நீதிமன்றங்களை புறந்தள்ளி இந்திய அரசாங்கம் மீதே வழக்கு போட முடியும் என்பதோடு வெளி நாட்டு முதலீட்டாளர்கள் நமது நாட்டில் விவசாய நிலங்களை வாங்க முடியும். இதனால் பெரிய சில்லறை வர்த்தக நிறுவனங்கள், உள்ளூர் சந்தைகள் அழிவதற்கு இந்த ஆர்செப் ஒப்பந்தம் வழிவகுக்கும் என விவசாய சங்கங்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து, இந்த ஒப்பந்தம் முழுமை பெறுவதற்கு முன்பே தமிழக அரசு, மத்திய அரசை வலியுறுத்தி, தடுத்து நிறுத்த வேண்டும் என கோரி தமிழக விவசாயிகள் சங்கம், உழவர் உழைப்பாளர் கட்சியினர் மற்றும் இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுவினர் செஞ்சிலுவை சங்கம் முன்பு மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய அரசாங்கம், சீனா, ஜப்பான், தென்கொரியா, நியூசிலாந்து உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளோடு பொருளாதார கூட்டு வணிக ஒப்பந்தம் குறித்து பேசி வருகிறது. இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால், விவசாயம் சார்ந்த சந்தைப்பொருட்கள் பலவற்றின் மீதான இறக்குமதி வரி, நிரந்தரமாக பூஜ்ஜியத்திற்கு கொண்டு வரப்படும் என கூறப்படுகிறது.

இதன் மூலம், பல நாடுகள் தங்களது விவசாய விளை பொருட்களை, நம் இந்திய நாட்டில் வியாபாரம் செய்ய தயாராக உள்ள நிலையில், பால்பண்ணை, பருத்தி, தேயிலை, காபி, உள்ளிட்ட பணப்பயிர்கள் பயிரிடும் தோட்டத்துறைக்கும் அபாயகரமான நிலை ஏற்படும் என விவசாயிகளிடையே அச்சம் நிலவி வருகிறது.
இந்த ஒப்பந்தம் மூலம் நமது நாட்டு விவசாயிகளுக்காகவும், தொழிலாளர்களுக்காகவும் சாதகமாக அரசு செயல்பட்டால், வெளிநாட்டு பெரு நிறுவனங்கள் தேசிய நீதிமன்றங்களை புறந்தள்ளி இந்திய அரசாங்கம் மீதே வழக்கு போட முடியும் என்பதோடு வெளி நாட்டு முதலீட்டாளர்கள் நமது நாட்டில் விவசாய நிலங்களை வாங்க முடியும். இதனால் பெரிய சில்லறை வர்த்தக நிறுவனங்கள், உள்ளூர் சந்தைகள் அழிவதற்கு இந்த ஆர்செப் ஒப்பந்தம் வழிவகுக்கும் என விவசாய சங்கங்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து, இந்த ஒப்பந்தம் முழுமை பெறுவதற்கு முன்பே தமிழக அரசு, மத்திய அரசை வலியுறுத்தி, தடுத்து நிறுத்த வேண்டும் என கோரி தமிழக விவசாயிகள் சங்கம், உழவர் உழைப்பாளர் கட்சியினர் மற்றும் இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுவினர் செஞ்சிலுவை சங்கம் முன்பு மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.