நீலகிரி : நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பேருந்து நிலையத்தில் மண்சரிவு பாறைகள் விழுந்ததால் பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். மேலும், பேருந்துகளும் வெளியேற்றப்பட்டுள்ள
நீலகிரி : நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பேருந்து நிலையத்தில் மண்சரிவு பாறைகள் விழுந்ததால் பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். மேலும், பேருந்துகளும் வெளியேற்றப்பட்டுள்ள

நீலகிரி மாவட்டம் குன்னூர் கோத்தகிரி சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த 5 நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மண் சரிவு நிலச்சரிவு ஏற்பட்டு போக்கு வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், கோத்தகிரி பேருந்து நிலையத்தில் பின்புறம் மண் சரிவு ஏற்பட்டு பேருந்து நிலையத்தில் கற்கள் விழுந்தது. இதனால் அங்கிருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்து பேருந்து அனைத்தும் வெளியே கொண்டு வரப்பட்டன. பயணிகள் அனைவரும் பேருந்து நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் தீயணைப்புத்துறையினர் தயார் நிலையில் பேருந்து நிலையத்தின் முன்பு பாதுகாப்பதற்காக உள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் கோத்தகிரி சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த 5 நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மண் சரிவு நிலச்சரிவு ஏற்பட்டு போக்கு வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், கோத்தகிரி பேருந்து நிலையத்தில் பின்புறம் மண் சரிவு ஏற்பட்டு பேருந்து நிலையத்தில் கற்கள் விழுந்தது. இதனால் அங்கிருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்து பேருந்து அனைத்தும் வெளியே கொண்டு வரப்பட்டன. பயணிகள் அனைவரும் பேருந்து நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் தீயணைப்புத்துறையினர் தயார் நிலையில் பேருந்து நிலையத்தின் முன்பு பாதுகாப்பதற்காக உள்ளனர்.