கோவையில் பணிக்கு கிளம்பிய பெண் தலைமைக்காவலர் மயங்கி விழுந்து பலியான சோகம்

கோவை : கோவை ஆயுதப்படை தலைமைக் காவலர் இன்று பணிக்கு கிளம்பிய போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : கோவை ஆயுதப்படை தலைமைக் காவலர் இன்று பணிக்கு கிளம்பிய போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வால்பாறை பகுதியை சேர்ந்த சுமைல் (34). இவர் கோவை ஆயுதப்படை தலைமை காவலராக பணிபுரிந்து வந்த அவர் சமீபத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு விடுமுறையில் இருந்த நிலையில் இன்று மீண்டும் பணிக்கு புறப்பட்டார்.

இப்படியிருக்க திடீரென இன்று காலை ஆயுதப்படை மைதானத்தில் மயங்கி விழுந்தார். பின்னர், அங்கு பணியில் இருந்த காவலர்கள் அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலமாக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேலும், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து பந்தய சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

பெண் காவலர் ஒருவர் பணிக்குச் செல்ல கிளம்பியபோது உயிரிழந்த சம்பவம் காவலர்கள் மத்தியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...