மேட்டுப்பாளையத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம் : போக்குவரத்து முடக்கம்

கோவை : மேட்டுப்பாளையத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் தரைப்பாலம், குடிநீர் திட்ட குழாய்கள் அடித்து செல்லப்பட்டதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை : மேட்டுப்பாளையத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் தரைப்பாலம், குடிநீர் திட்ட குழாய்கள் அடித்து செல்லப்பட்டதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியது முதலே பரவலாக அனைத்து இடங்களிலும் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேட்டுப்பாளையத்தில் புறநகர் பகுதிகளில் உள்ள குளம், குட்டைகள், ஏரிகள் என அனைத்தும் நிறைந்து காணப்படுகிறது. இதில் முக்கிய நீராதாரமாக விளங்கக்கூடிய ஏழு எறுமை பள்ளத்தில் நேற்று பெய்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.



கடுமையான வெள்ளம் காரணமாக பெள்ளாதி ஊராட்சிக்குட்பட்ட குரும்பாபாளையம் கிராமத்தின் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு, சுமார் 20 அடிக்கும் மேல் இரண்டாக துண்டிக்கப்பட்டு சேதமானது. இதனால் அப்பகுதி மக்கள் அந்த கிராமத்தில் இருந்து அன்னூர் சாலையை அடைய 10 கிலோ மீட்டர் சுற்றிச் செல்லும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதால் கிராம மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

மேலும், இதே வெள்ளத்தில் சிக்கி மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து திருப்பூருக்கு குடிநீர் எடுத்துச் செல்லும் ராட்சத குழாய்களும் அடித்து செல்லப்பட்டன. இதனால் திருப்பூர் மற்றும் அதன் வழியோர கிராம மக்களுக்கு கொண்டு செல்லப்பட்ட குடிநீர் வினியோகம் தடைப்பட்டுள்ளது. எனவே இதனை உடனடியாக சீரமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...