மேட்டுப்பாளையம் ரயில் பாதை சீரமைப்பு பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதகை மலை ரயில் இன்று முதல் மூன்று நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேட்டுப்பாளையம் ரயில் பாதை சீரமைப்பு பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதகை மலை ரயில் இன்று முதல் மூன்று நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி இயக்கப்படும் மலை ரயில் போக்குவரத்து யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய சின்னம். அடந்த வனத்தில் பயணித்து காடுகளில் உள்ள இயற்கை அழகினை ரசிக்க இதற்கென தனி மகத்துவம் உண்டு. இந்த நிலையில், வட கிழக்கு பருவமழை துவங்கியது முதலே மலை ரயில் பாதை அமைந்துள்ள மேட்டுப்பாளையம், கல்லார் பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இதனால் மலைரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்ட காரணத்தால் கடந்த 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டது.
இதன் பின்னர் நேற்று வழக்கமான ரயில் போக்குவரத்து துவங்கிய நிலையில், மீண்டும் கல்லார் ஹில்கிரோ ரயில்நிலையம் இடையே மன்சரிவு ஏற்பட்டது. இதன்காரனமாக ரயில் போக்குவரத்து தடைபட்டது.
இதனை தொடர்ந்து சீரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வந்தாலும் பருவமழை தீவிரமாகப் பெய்து வருகிறது. எனவே சீரமைப்பு பணி காரணமாகவும் மேலும் தீவிரமடையும் பருவமழையால் மேலும் மலை ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் மூன்று நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி 22,23,24 ஆகிய தேதிகள் வரை மூன்று நாட்கள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் மலை ரயிலுக்கான ஆண்லைன் முன்பதிவும் மூன்று நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி இயக்கப்படும் மலை ரயில் போக்குவரத்து யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய சின்னம். அடந்த வனத்தில் பயணித்து காடுகளில் உள்ள இயற்கை அழகினை ரசிக்க இதற்கென தனி மகத்துவம் உண்டு. இந்த நிலையில், வட கிழக்கு பருவமழை துவங்கியது முதலே மலை ரயில் பாதை அமைந்துள்ள மேட்டுப்பாளையம், கல்லார் பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இதனால் மலைரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்ட காரணத்தால் கடந்த 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டது.
இதன் பின்னர் நேற்று வழக்கமான ரயில் போக்குவரத்து துவங்கிய நிலையில், மீண்டும் கல்லார் ஹில்கிரோ ரயில்நிலையம் இடையே மன்சரிவு ஏற்பட்டது. இதன்காரனமாக ரயில் போக்குவரத்து தடைபட்டது.
இதனை தொடர்ந்து சீரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வந்தாலும் பருவமழை தீவிரமாகப் பெய்து வருகிறது. எனவே சீரமைப்பு பணி காரணமாகவும் மேலும் தீவிரமடையும் பருவமழையால் மேலும் மலை ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் மூன்று நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி 22,23,24 ஆகிய தேதிகள் வரை மூன்று நாட்கள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் மலை ரயிலுக்கான ஆண்லைன் முன்பதிவும் மூன்று நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது