நீலகிரி : வடகிழக்கு பருவமழை இன்னும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் குன்னூர் அருகே ராணுவ முகாம் செல்லும் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி : வடகிழக்கு பருவமழை இன்னும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் குன்னூர் அருகே ராணுவ முகாம் செல்லும் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை, நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேல் பெய்து வருகிறது. இதில் கேத்தி, மஞ்சூர், குன்னூர், பர்லியார் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மண் சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே வானிலை ஆய்வு மையம் தென்மாவட்டங்களில் இன்னும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், குன்னூரில் ராணுவ முகாம் செல்லும் ஆரஞ்சு குராேவ் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதில் மூன்று மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது நெடுஞ்சாலைத் துறையினர் பாெக்லைன் வாகனம் மூலம் மண் குவியல்களை அகற்றி வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை, நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேல் பெய்து வருகிறது. இதில் கேத்தி, மஞ்சூர், குன்னூர், பர்லியார் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மண் சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே வானிலை ஆய்வு மையம் தென்மாவட்டங்களில் இன்னும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், குன்னூரில் ராணுவ முகாம் செல்லும் ஆரஞ்சு குராேவ் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதில் மூன்று மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது நெடுஞ்சாலைத் துறையினர் பாெக்லைன் வாகனம் மூலம் மண் குவியல்களை அகற்றி வருகின்றனர்.