இந்து கடவுளை இழிவுபடுத்தி பேசிய வழக்கு ; காரப்பன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜகவினர் புகார்

கோவை : இந்துக்கடவுளை இழிவுபடுத்தி பேசியதாக கூறி தேசிய கைத்தறி பயிற்சியாளர் காரப்பன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜகவினர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.


கோவை : இந்துக்கடவுளை இழிவுபடுத்தி பேசியதாக கூறி தேசிய கைத்தறி பயிற்சியாளர் காரப்பன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜகவினர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகையை சேர்ந்தவர் காரப்பன். சிறுமுகை கைத்தறியின் தந்தையாக கருதப்படும் இவர், தேசிய கைத்தறி பயிற்சியாளராக இருந்து வருகிறார்.

இவர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவையில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய காரப்பன், இந்து கடவுளான கிருஷ்ணர் மற்றும் அத்திவரதர் குறித்து இழிவான வகையில் பேசியுள்ளார். அது குறித்த வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாக பரவியதை அடுத்,து இந்து முன்னணி சார்பில் காரப்பன் மீது தேசவிரோத சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய கோரி கடந்த வாரம் சிறுமுகை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.நந்தகுமார் தலைமையிலான அக்கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர்.



இது தொடர்பாக அந்த புகார் மனுவில், எங்களது இந்து கடவுள்களான கிருஷ்ணன் மற்றும் அத்திவரதரை காரப்பன் என்பவர் மிகவும் இழிவாக பேசி உள்ளார். இவரது பேச்சுக்கள் இந்துக்களை கேவலப்படுத்தியதுடன் பல மனங்கள் புண்படும் படியும் உள்ளது. குறிப்பாக, இந்து பெண்களை இவரின் பேச்சுகள் மனரீதியாக பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. ஆகவே காரப்பன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...