நிறைந்தது சித்திரைச்சாவடி அணைக்கட்டு : ஆர்ப்பரித்து வரும் நீரால் பொதுமக்கள், தன்னார்வலர்கள் மகிழ்ச்சி

கோவை : வடகிழக்கு பருவமழை காரணமாக நொய்யல் ஆற்றின் முதல் அணைக்கட்டான சித்திரைச்சாவடி அணைக்கட்டில் நீர் நிறைந்து ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.


கோவை : வடகிழக்கு பருவமழை காரணமாக நொய்யல் ஆற்றின் முதல் அணைக்கட்டான சித்திரைச்சாவடி அணைக்கட்டில் நீர் நிறைந்து ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

தென்மேற்கு பருவமழை காரணமாக, கோவையில் உள்ள நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு முக்கிய நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இருந்தபோதும் நீர்நிலைகள் முழுமையாக நிரம்பாமல் இருந்து வந்தது.



இதனிடையே, தற்போது வடகிழக்கு துவங்கி தீவிரமடைந்துள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.



இதையடுத்து நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடி அணைக்கட்டு நிரம்பி வழிகிறது. அணையில் இருந்து நிரம்பி வழியும் நீர் ஆர்ப்பரித்து ஆற்றில் வழிவதால், பேரூர் படித்துறை உட்பட நொய்யல் ஆற்றின் வழித்தடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.



நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், விரைவில் நீர்நிலைகள் நிரம்பு நிலை உருவாகியுள்ளது. இதனால் நொய்யல் ஆறு மற்றும் நீர்நிலைகளை தூர்வாரும் பணியில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஈடுபட்டு வந்த தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...