கோவை : சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.
கோவை : சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையின் நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக கன மழை பெய்து வரும் சூழலில் அணை வேகமாக நிரம்பி வருகிறது.
சுமார் 50 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது 44 அடி வரை தண்ணீர் நிரம்பியுள்ளது. இன்றைய நிலவரப்படி, நீர்த்தேக்கத்தில் நீர் மட்டம் 876.80 மீட்டர் (43.95 அடி) ஆக இருந்தது. நீர்த்தேக்கத்தின் மொத்த ஆழம் 878.50 மீ (49.53).
நீர் விநியோகமும் 101.40 மில்லியிலிருந்து 105.45 மில்லியனாக அதிகரித்துள்ளது. நீர்த்தேக்கத்தில் 6 மி.மீ மற்றும் அடிவாரத்தில் 13 மி.மீ மழை பெய்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையின் நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக கன மழை பெய்து வரும் சூழலில் அணை வேகமாக நிரம்பி வருகிறது.
சுமார் 50 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது 44 அடி வரை தண்ணீர் நிரம்பியுள்ளது. இன்றைய நிலவரப்படி, நீர்த்தேக்கத்தில் நீர் மட்டம் 876.80 மீட்டர் (43.95 அடி) ஆக இருந்தது. நீர்த்தேக்கத்தின் மொத்த ஆழம் 878.50 மீ (49.53).
நீர் விநியோகமும் 101.40 மில்லியிலிருந்து 105.45 மில்லியனாக அதிகரித்துள்ளது. நீர்த்தேக்கத்தில் 6 மி.மீ மற்றும் அடிவாரத்தில் 13 மி.மீ மழை பெய்துள்ளது.