மழையால் இடிந்து விழுந்த வீடுகள் : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பொதுமக்கள்

கோவை : மேட்டுப்பாளையம் பகுதிகளில் பெய்யும் தொடர் மழை காரணமாக மூன்று வீடுகள் இடிந்து சேதமானது. இதில் அதிர்ஷ்டவசமாக இடியும் முன்னரே குடியிருந்தவர்கள் வெளியேறியதால் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டது.

கோவை : மேட்டுப்பாளையம் பகுதிகளில் பெய்யும் தொடர் மழை காரணமாக மூன்று வீடுகள் இடிந்து சேதமானது. இதில் அதிர்ஷ்டவசமாக இடியும் முன்னரே குடியிருந்தவர்கள் வெளியேறியதால் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, மேட்டுப்பாளையத்தின் மேற்கு பகுதியான காரமடை, வெள்ளியங்காடு, தாயனூர், புங்கம் பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் நீர் நிலைகள் நிரம்பி தண்ணீர் ஓடுகிறது.

இந்த நிலையில், வெள்ளியங்காடு ஊராட்சிக்குட்பட்ட மூத்துக்கல்லூர் பகுதியில் நள்ளிரவு, இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. 



இதனால் அந்த கிராமத்தில் ஊரின் நடுவே இருந்த மூன்று குடியிருப்புகள் இடிந்து விழுந்து சேதமானது. மகேஷ் குமார், கிருஷ்ணசாமி, மாதைய கவுடர் உள்ளிட்டவர்களின் மூன்று வீடுகள் ஈரம் காரணமாக அடுத்தடுத்து இடிந்து விழுந்து சேதமானது. வீட்டின் சுவர்கள் விரிசல் விடுவதை கண்ட குடியிருப்பவர்கள் சுதாரித்து முன்னரே வெளியேறியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...