வெள்ளலூரில் 3 நாட்களாக மழை நீரால் சூழப்பட்டுள்ள வீடுகள் ; மழை நீரை வெளியேற்ற கோரிக்கை

கோவை : கோவை வெள்ளலூரில் கனமழை காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி வெள்ள நீர் 3 நாட்களாக தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

கோவை : கோவை வெள்ளலூரில் கனமழை காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி வெள்ள நீர் 3 நாட்களாக தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

வடகிழக்கு பருவமழை காரணமாக, கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள குளம் நிரம்பி வருகிறது. இதனிடையே குளத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீர், தேனீஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள சக்தி கார்டன், கிருஷ்ணா அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்துள்ளது.



மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி வெள்ள நீர் சூழ்ந்து உள்ளதால், குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த 3 நாட்களாக குடியிருப்புகளை சுற்றி வெள்ள நீர் தேங்கியிருப்பதாகவும், இதனை வெளியேற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

நீர் வழித்தட ஆக்கிரமிப்புகள் காரணமாக குளத்தில் இருந்து வெளியேறும் நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதாகவும், நீர் வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றி, வெள்ள நீர் குடியிருப்புகளுக்குள் நுழைவதை தடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...