நீலகிரியில் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கு ; குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம்

நீலகிரி : கடந்த 2017ம் ஆண்டு நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி பகுதியில் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த விஜயரத்தினம் என்ற குற்றவாளிக்கு போக்சோ சட்டத்தில் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் 5 ஆயிரம் அபராதம் விதித்து உதகை மகளிர் நீதிமன்றம் நீதிபதி முரளீதரன் தீர்ப்பளித்தார்

நீலகிரி : கடந்த 2017ம் ஆண்டு நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி பகுதியில் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த விஜயரத்தினம் என்ற குற்றவாளிக்கு போக்சோ சட்டத்தில் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் 5 ஆயிரம் அபராதம் விதித்து உதகை மகளிர் நீதிமன்றம் நீதிபதி முரளீதரன் தீர்ப்பளித்தார்

கூடலூர் அருகே ஓவேலி முல்லை நகர் என்ற பகுதியில் விஜயரத்தினம் என்ற சுரேஷ் (22) அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளான்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கூடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், குற்றவாளியை கூடலூர் காவல் துறையினர் கைது செய்தனர்.

பின்பு, இந்த வழக்கு உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், கடந்த 16ம் தேதியன்று ஆஜராக வேண்டிய குற்றவாளி, நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் தப்பித்த நிலையில், சம்பந்தப்பட்ட குற்றவாளியை காவல் துறையினர் கோவையில் கைது செய்தனர்.



இதனிடையே, உதகை மகளிர் நீதிமன்றத்தில் குற்றவாளியை போலீசார் இன்று ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரன், குற்றவாளிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். குற்றவாளி தண்டனையை ஏக காலத்தில் முழுமையாக அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார். 

மேலும், நீதிபதி உத்தரவின்படி பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் 4 லட்சம் ரூபாய் தொகையை உடனடியாக வங்கி கணக்கில் மாவட்ட நிர்வாகம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...