அரை சவரன் நகைக்காக மூதாட்டியை கொலை செய்து தீ வைத்த கொடூரம் ; குற்றவாளிகளுக்கு போலிஸ் வலை வீச்சு

கோவை : செட்டிப்பாளையம் காவல் எல்லைக்கு உட்பட மைலேரிபாளையம் பகுதியில், அரை சவரன் நகைக்காக மூதாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு மளிகைக்கடைக்கு தீவைத்து தப்பி ஓடிய கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை : செட்டிப்பாளையம் காவல் எல்லைக்கு உட்பட மைலேரிபாளையம் பகுதியில், அரை சவரன் நகைக்காக மூதாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு மளிகைக்கடைக்கு தீவைத்து தப்பி ஓடிய கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயபால்(60) தேவகி (55) தம்பதியினர், கடந்த மூன்று ஆண்டுகளாக கோவை மைலேரிபாளையம் அருகே உள்ள தொப்பம்பாளையம் சாலையில் மளிகை கடை நடத்தி வந்த நிலையில், அதேகடையில் வசித்தும் வந்தனர்.

இந்த நிலையில், கடந்த மூன்று தினங்களுக்கு முன் மூதாட்டியின் கணவர் ஜெயபால் தனது சொந்த பணி நிமித்தம் திருவள்ளுவர் மாவட்டம் சென்றுள்ளார். இதனால் மூதாட்டி தேவகி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.



இதையறிந்த மர்ம நபர்கள், மூதாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, அவர் காதில் அணிந்திருந்த அரை பவுன் நகையை பறித்துச் சென்றனர். மேலும், தடயங்களை அழிக்க முயன்ற மர்மநபர்கள் சடலத்தை சுற்றியும் மிளகாய் பொடி தூவியதுடன் மளிகை கடைக்கு தீ வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

நள்ளிரவில் மளிகை கடையில் தீப்பற்றி எரிவதை கண்ட அக்கம்பக்கத்தினர், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, தேவகி கழுத்தறுக்கப்பட்டு ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். பின்னர் செட்டிபாளையம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், தேவகியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்த போலீசார், நகைக்காக தான் கொல்லப்பட்டாரா அல்லது வேறு காரணங்கள் ஏதும் இருக்கின்றதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க டிஎஸ்பி பாலமுருகன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...