சுவிஸ் அமைச்சரை பிரமிக்க வைத்த கோலம் : துப்புரவு பெண் தொழிலாளர்களுக்கு பாராட்டு

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுவிட்சர்லாந்து பெண் அமைச்சர், துப்புரவு பெண் தொழிலாளர்கள் போட்டிருந்த கோலத்தை கண்டு அதிசயித்தார்.

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுவிட்சர்லாந்து பெண் அமைச்சர், துப்புரவு பெண் தொழிலாளர்கள் போட்டிருந்த கோலத்தை கண்டு அதிசயித்தார்.



சாய்பாபா காலனி பாரதி பார்க் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சுவிட்சர்லாந்து நாட்டின் சுற்றுச்சூழல், எரிசக்தி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிமனொட்டா சமருகா கலந்து கொண்டார். அப்போது, அவரை வரவேற்கும் விதமாக போடப்பட்டிருந்த கோலங்களை பார்த்த அவர், இதனை போட்டது யார் என அங்கிருந்த அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.



கோலத்தைப் போட்டது துப்புரவு பெண் தொழிலாளர்கள் என அதிகாரிகள் கூறியதையடுத்து, அவர்களை நேரில் பார்க்க அமைச்சர் விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து, அங்கு வந்த தொழிலாளர்களிடம் வாழ்த்துக்களை தெரிவித்த அவர், கோலம் போடுவது குறித்து கேட்டறிந்தார்.



இதை தொடர்ந்து, அவர்களிடம் குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து கேட்டறிந்த அவர், பின்னர் துப்புரவு பெண் தொழிலாளர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இச்சம்பவம் அங்கு கூடியிருந்தவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...