நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு மிரட்டல் விடுத்த நகர திட்ட ஆய்வாளர் கைது

நீலகிரி : நீலகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி ஆணையருக்கு சமூக வலைத்தளங்களில் மிரட்டல் விடுத்த நகர திட்ட ஆய்வாளர் அறிவுடைநம்பி கைது செய்யப்பட்டார்.

நீலகிரி : நீலகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி ஆணையருக்கு சமூக வலைத்தளங்களில் மிரட்டல் விடுத்த நகர திட்ட ஆய்வாளர் அறிவுடைநம்பி கைது செய்யப்பட்டார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் நகர்ப்புற திட்ட ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் அறிவுடைநம்பி. இந்த நிலையில், கடந்த 30ம் தேதி நீலகிரியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடத்திற்கு நகராட்சி ஆணையாளர் உத்தரவு படி சீல் வைக்கப்பட்டது. ஆனால் அறிவுடைநம்பி கையூட்டுப் பெற்றுக்கொண்டு சீல் வைத்த கட்டிடத்தைத் திறக்க அனுமதி வழங்கினார். இதனால் நகராட்சி ஆணையாளர் நாராயணன் நகர்ப்புற திட்ட ஆய்வாளர் அறிவுடைநம்பியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நகர்ப்புற திட்ட ஆய்வாளர் அறிவுடைநம்பி மது போதையில் சமூக வலைத்தளங்களில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் நகராட்சி பொறுப்பு ஆணையாளர் நாராயணசாமி ஆகிய இருவரையும் மிரட்டும் வகையில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் நகராட்சி ஆணையாளர் என்னை எதுவும் செய்ய முடியாது எனவும் நான் மீண்டும் புதன்கிழமை அன்று பணியில் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆணையாளருக்கு எதிராக பணியாற்ற இருப்பதாக சர்ச்சைக் கருத்தை வெளியிட்டுள்ளார். இச்சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, கூடலூர் நகராட்சி பொறுப்பு ஆணையாளர் நாராயணன், ஊட்டி ஜி1 காவல் நிலையத்தில் அறிவுடைய நம்பி மீது புகார் அளித்தார். இதையடுத்து காவல் ஆய்வாளர் விநாயகம், அறிவுடை நம்பியை நேற்று இரவு கைது செய்தார். பின்னர் மாஜிஸ்ட்ரேட் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...