9 வயது சிறுமி பலியான விவகாரம் ; டெங்கு காய்ச்சலை மறைப்பதை விட்டுவிட்டு டெங்குவை ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் - சிறுமியின் உறவினர்கள் கோரிக்கை

கோவை : கோவை புலியகுளம் அருகே உள்ள பெரியார் நகர் பகுதியில் 9 வயது சிறுமி பலியான சம்பவத்தில் சிறுமியின் இறப்பிற்கு காரணம் டெங்கு காய்ச்சலே என மருத்துவர்கள் தெரிவித்ததாக உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.


கோவை : கோவை புலியகுளம் அருகே உள்ள பெரியார் நகர் பகுதியில் 9 வயது சிறுமி பலியான சம்பவத்தில் சிறுமியின் இறப்பிற்கு காரணம் டெங்கு காய்ச்சலே என மருத்துவர்கள் தெரிவித்ததாக உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கோவை புலியகுளம் அருகே உள்ள பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த பாபுவின் மகள் தீபிகா (9). இந்த சிறுமி மருதூர் மாநகராட்சி துவக்க பள்ளியில் படித்து வந்தார். இவர் கடந்த 10 நாட்களாக காய்ச்சல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து சிகிச்சைக்காக கடந்த 16ம் தேதி உறவினர்களால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் நேற்று காலை தீபிகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



மாணவி உயிரிழந்ததையடுத்து மாநகராட்சி பணியாளர்கள் சிறுமியின் வீட்டருகே மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். தீபிகாவிற்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக மருத்துவர் கூறினாலும், மருத்துவ சான்றிதழில் டெங்கு என குறிப்பிடாமல் டெங்கு உயிரிழப்புகளை மறைப்பதாகத் தெரிவித்த உறவினர்கள், பெரியார் நகர் பகுதியில் நிலவும் சுகாதார சீர்கேடு மற்றும் கொசு தொல்லை காரணமாக டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக தெரிவித்தனர்.

மேலும், சிறுமியின் உயிரிழப்பு தொடர்பாக உறவினர் மணிகண்டன் கூறும்போது ;

காய்ச்சல் பாதிப்பினால் கடந்த 16ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் தீபிகாவை அனுமதித்தோம். ஆனால் நேற்று காலை தான் மருத்துவர் ஒருவர் தீபிகாவிற்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை எங்களிடம் தெரிவித்தார். இதையடுத்து மருத்துவர் தெரிவித்து சில மணிநேரங்களில் தீபிகா உயிரிழந்துவிட்டார். நாங்கள் மருத்துவமனையிலிருந்து தீபிகாவின் உடலை வீட்டிற்கு எடுத்து வருவதற்கு முன்பே மாநகராட்சி பணியாளர்கள் கொசுமருந்து, பிளீச்சிங் பவுடர் ஆகியவற்றை எங்கள் வீட்டருகே தெளித்து வைத்திருந்தனர். இருப்பினும் டெங்கு காய்ச்சல் என்பதை சொல்ல மாநகராட்சியும் மருத்துவமனை நிர்வாகமும் மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து பெரியார் நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறுகையில்:-

கொசுக்கள் அதிக அளவில் பரவி வருவதால் அடிக்கடி காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதாக கூறினர். மேலும், எங்கள் வீட்டருகே 9 வயது சிறுமி இறந்த விவகாரம் எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் உடனடியாக கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு எங்கள் உயிர்களை காக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...