அரசு போக்குவரத்து கழகத்தை தனியார் மயமக்கும் சூழ்ச்சியை தமிழக அரசு மேற்கொள்வதாகவும், மத்திய அரசின் முயற்சிக்கு மாநில அரசு துணைபோவதாக குற்றம்சாட்டி அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு போக்குவரத்து கழகத்தை தனியார் மயமக்கும் சூழ்ச்சியை தமிழக அரசு மேற்கொள்வதாகவும், மத்திய அரசின் முயற்சிக்கு மாநில அரசு துணைபோவதாக குற்றம்சாட்டி அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் தற்போதுள்ள பேருந்து வழித்தடங்களை படிப்படியாக தனியார் மயமாக்க முயற்சி நடைபெற்று வருவதாக தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக 525 மின்சார பேருந்துகளை சென்னை, அரசு விரைவு தவிர மற்ற அனைத்து கழகங்ளின் வழித்தடங்களில் அரசு இயக்குகிறது. இந்த மின்சார பேருந்துகள் காண்ட்ராக்ட் முறையில் இயக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
2000 புதிய பேருந்துகள் இதே அடிப்படையில் இயக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது, ஊழியர் நலனுக்கு எதிரானது எனக்கூறி தமிழக அரசை கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், போக்குவரத்து கழக வழித்தடங்களில் தனியார் பேருந்துகளை இயக்கக்கூடாது, மின்சாரப்பேருந்து என்ற பெயரால் போக்குவரத்து கழகங்களை சீர்குலைக்கும் மத்திய அரசின் சதிக்கு துணைபோக கூடாது, சேவைத்துறையான போக்குவரத்து துறைக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
மேட்டுபாளையம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து தலைமை பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எல்பிஎப், சிஐடியு, ஏஐடியுசி, எம்எல்எப், எச்எம்எஸ், ஐஎன்டியுசி, டிடிஎஸ்எப், உள்ளிட்ட சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பகுதியில் இருந்து அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் தற்போதுள்ள பேருந்து வழித்தடங்களை படிப்படியாக தனியார் மயமாக்க முயற்சி நடைபெற்று வருவதாக தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக 525 மின்சார பேருந்துகளை சென்னை, அரசு விரைவு தவிர மற்ற அனைத்து கழகங்ளின் வழித்தடங்களில் அரசு இயக்குகிறது. இந்த மின்சார பேருந்துகள் காண்ட்ராக்ட் முறையில் இயக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
2000 புதிய பேருந்துகள் இதே அடிப்படையில் இயக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது, ஊழியர் நலனுக்கு எதிரானது எனக்கூறி தமிழக அரசை கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், போக்குவரத்து கழக வழித்தடங்களில் தனியார் பேருந்துகளை இயக்கக்கூடாது, மின்சாரப்பேருந்து என்ற பெயரால் போக்குவரத்து கழகங்களை சீர்குலைக்கும் மத்திய அரசின் சதிக்கு துணைபோக கூடாது, சேவைத்துறையான போக்குவரத்து துறைக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
மேட்டுபாளையம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து தலைமை பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எல்பிஎப், சிஐடியு, ஏஐடியுசி, எம்எல்எப், எச்எம்எஸ், ஐஎன்டியுசி, டிடிஎஸ்எப், உள்ளிட்ட சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பகுதியில் இருந்து அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.