நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இரவு முழுவதும் பெய்த பலத்த மழையின் காரணமாக உதகை- குன்னூர் சாலையில் எம்ஜிஎம் பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து 2 மணிநேரம் பாதிக்கப்பட்டது.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இரவு முழுவதும் பெய்த பலத்த மழையின் காரணமாக உதகை- குன்னூர் சாலையில் எம்ஜிஎம் பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து 2 மணிநேரம் பாதிக்கப்பட்டது.

இதனைச் சீர்செய்யும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக அதிகாலை 2 மணிக்கு மேல் பலத்த மழை பெய்தது. இரவு நேரத்தில் பெய்து வரும் இந்த மழையின் காரணமாக அவ்வப்பாேது மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனை உடனுக்குடன் நெடுஞ்சாலைத் துறையினர் சீர் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அருவங்காடு எம்ஜிஎம் சாலையில் ராட்சத மரம் விழுந்ததால் உதகை - குன்னூர் சாலையில் இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனைச் சீர்செய்யும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக அதிகாலை 2 மணிக்கு மேல் பலத்த மழை பெய்தது. இரவு நேரத்தில் பெய்து வரும் இந்த மழையின் காரணமாக அவ்வப்பாேது மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனை உடனுக்குடன் நெடுஞ்சாலைத் துறையினர் சீர் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அருவங்காடு எம்ஜிஎம் சாலையில் ராட்சத மரம் விழுந்ததால் உதகை - குன்னூர் சாலையில் இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.