கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி நான்கு மதகுகள் வழியே வினாடிக்கு 30,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பவானி ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி நான்கு மதகுகள் வழியே வினாடிக்கு 30,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பவானி ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழையானது அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்னரே கோவை, நீலகிரி மாவட்டத்தில் துவங்கி, கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த இரு நாட்களாக பில்லூர் அணை அமைந்துள்ள மேற்குத்தொடர்ச்சி மலை காடுகளில் கன மழைபெய்து வருகிறது. இதன் காரணமாக பில்லூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர் மட்டம் 98 அடியாக உயர்ந்தது.
அணையின் முழு கொள்ளளவான 100 அடியில் தற்போது 98அடி வரை தண்ணீர் நிரம்பியதால். அணைக்கு வரும் நீர் வரத்தான 30,000 கன அடி நீர் முழுவதும் பாதுகாப்பு கருதி, நான்கு மதகுகள் வழியே 30,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர மக்களுக்குப் பாதுகாப்பு கருதி வருவாய்த்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரையோர மக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ துணி துவைக்கவோ, மீன்பிடிக்கவோ கூடாது என காவல்துறை மூலம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மேட்டுப்பாளையம் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை இனைந்து கரையோரம் உள்ள குடியிருப்புகளுக்குச் சென்று தண்டோராக்கள் மூலம் ஆற்றோரம் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி வருகின்றனர்.
பில்லூர் அணை இந்தாண்டு ஐந்தாவது முறையாக நிரம்பியுள்ளதால் அதன் உபரி நீர், பவானி ஆற்றின் வழியே பவானி சாகர் அணையினை அடைவதால் அதன் நீர் மட்டம் தற்போது கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.