திருப்பூர் : திருப்பூரில் செல்போன் கடையில் விலை பேரம் பேசுவது போல் நடித்து செல்போனை திருடிச் சென்ற நபர் குறித்து சிசிடிவி காட்சி ஆதாரங்களுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் : திருப்பூரில் செல்போன் கடையில் விலை பேரம் பேசுவது போல் நடித்து செல்போனை திருடிச் சென்ற நபர் குறித்து சிசிடிவி காட்சி ஆதாரங்களுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் நாச்சிபாளையம் பகுதியில் பைசல் என்பவர் சொந்தமாக செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு அவர் கடைக்குச் சென்ற வாலிபர் ஒருவர் 8000 ரூபாய் மதிப்புள்ள மொபைல் போனை விலை கேட்பது போல் பேரம்பேசி கொண்டிருந்தார். திடீரென மொபைல் போனுடன் ஓட்டம் பிடித்த நபர் ஏற்கனவே அங்கு இரு சக்கர வாகனத்தில் தயாராக இருந்த நண்பருடன் சேர்ந்து மாயமாகிவிட்டார்.
செல்போனுடன் வாலிபர் ஓடுவதைக் கண்டு வெளியே வந்த ஊழியர்கள் பிடிக்க முயற்சிக்கும் அவர்கள் வாகனம் நிற்காமல் சென்று விட்டது. இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்ததையடுத்து பைசல் அளித்த புகாரின் அடிப்படையில், திருப்பூர் ஊரக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் நாச்சிபாளையம் பகுதியில் பைசல் என்பவர் சொந்தமாக செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு அவர் கடைக்குச் சென்ற வாலிபர் ஒருவர் 8000 ரூபாய் மதிப்புள்ள மொபைல் போனை விலை கேட்பது போல் பேரம்பேசி கொண்டிருந்தார். திடீரென மொபைல் போனுடன் ஓட்டம் பிடித்த நபர் ஏற்கனவே அங்கு இரு சக்கர வாகனத்தில் தயாராக இருந்த நண்பருடன் சேர்ந்து மாயமாகிவிட்டார்.
செல்போனுடன் வாலிபர் ஓடுவதைக் கண்டு வெளியே வந்த ஊழியர்கள் பிடிக்க முயற்சிக்கும் அவர்கள் வாகனம் நிற்காமல் சென்று விட்டது. இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்ததையடுத்து பைசல் அளித்த புகாரின் அடிப்படையில், திருப்பூர் ஊரக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.