கோவை : இலங்கை அகதிகளுக்கு போலி ஆவணம் தயாரித்து கொடுத்த வழக்கில் கோவையை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் தற்போது அந்த வழக்கில் தொடர்புடைய மற்றொருவரை க்யூ பிரிவு போலீசார் மூன்றுநாட்கள் காவலில் எடுத்துள்ளனர்.
கோவை : இலங்கை அகதிகளுக்கு போலி ஆவணம் தயாரித்து கொடுத்த வழக்கில் கோவையை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் தற்போது அந்த வழக்கில் தொடர்புடைய மற்றொருவரை க்யூ பிரிவு போலீசார் மூன்றுநாட்கள் காவலில் எடுத்துள்ளனர்.
இலங்கையில் 1983-ல் உள்நாட்டுப் போர் தொடங்கிய காலக்கட்டத்திலிருந்தே தமிழகத்துக்கு அகதிகளாக இலங்கைத் தமிழர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.
இதில் தமிழகத்தில் மொத்தம் 119 அகதிகள் முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில், 33,000-க்கும் அதிகமானோர் காவல் நிலையங்களில் அகதிகளாகப் பதிவு செய்துவிட்டு, வெளியிடங்களில் வசித்து வருகின்றனர்.
இப்படியிருக்க, கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, போளூவம்பட்டி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அகதிகள் முகாம் உள்ளன.
இந்த முகாம்களில் ஆயிரக்கணக்கான இலங்கை அகதிகள் வசித்து வருகின்றனர்.
இப்படியிருக்க மதுரை, திருச்சியில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து பாஸ்போட் வாங்கிய நபர்கள் சிலரை கியு பிரிவு
போலீசார் கைது செய்தனர்.
இதனை, தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள இலங்கை அகதிகள் முகாம் மற்றும் ஏஜென்ஸிகளில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணையில் கோவை கணபதியைச் சேர்ந்த ரகுபதி என்பவரை கியூ பிரிவு போலிசார் கடந்த மூன்றாம் தேதி கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் போலியான ஆவணங்களை தாக்கல் செய்து 6 பேருக்கு பாஸ்போர்ட் பெற்று கொடுத்து இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, ரகுபதியை கோவை இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கியூ பிரிவு போலிசார் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
பின்னர், ரகுபதி கொடுத்த தகவலின் பேரில் கோவையைச் சேர்ந்த திலீபன் என்பவரை அடுத்த நாளே போலீசார் கைது செய்தனர்.
அதேபோல புதுக்கோட்டை இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வரும் ஆனந்தன் என்பவரையும் புதுக்கோட்டை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில், ஆனந்தனை கோவை கியூ பிரிவு போலீசார் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் மனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து நீதிபதி வரும் 20ம் தேதி வரை அவரை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையில் 1983-ல் உள்நாட்டுப் போர் தொடங்கிய காலக்கட்டத்திலிருந்தே தமிழகத்துக்கு அகதிகளாக இலங்கைத் தமிழர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.
இதில் தமிழகத்தில் மொத்தம் 119 அகதிகள் முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில், 33,000-க்கும் அதிகமானோர் காவல் நிலையங்களில் அகதிகளாகப் பதிவு செய்துவிட்டு, வெளியிடங்களில் வசித்து வருகின்றனர்.
இப்படியிருக்க, கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, போளூவம்பட்டி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அகதிகள் முகாம் உள்ளன.
இந்த முகாம்களில் ஆயிரக்கணக்கான இலங்கை அகதிகள் வசித்து வருகின்றனர்.
இப்படியிருக்க மதுரை, திருச்சியில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து பாஸ்போட் வாங்கிய நபர்கள் சிலரை கியு பிரிவு
போலீசார் கைது செய்தனர்.
இதனை, தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள இலங்கை அகதிகள் முகாம் மற்றும் ஏஜென்ஸிகளில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணையில் கோவை கணபதியைச் சேர்ந்த ரகுபதி என்பவரை கியூ பிரிவு போலிசார் கடந்த மூன்றாம் தேதி கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் போலியான ஆவணங்களை தாக்கல் செய்து 6 பேருக்கு பாஸ்போர்ட் பெற்று கொடுத்து இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, ரகுபதியை கோவை இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கியூ பிரிவு போலிசார் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
பின்னர், ரகுபதி கொடுத்த தகவலின் பேரில் கோவையைச் சேர்ந்த திலீபன் என்பவரை அடுத்த நாளே போலீசார் கைது செய்தனர்.
அதேபோல புதுக்கோட்டை இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வரும் ஆனந்தன் என்பவரையும் புதுக்கோட்டை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில், ஆனந்தனை கோவை கியூ பிரிவு போலீசார் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் மனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து நீதிபதி வரும் 20ம் தேதி வரை அவரை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.