வரும் அக்., 19ம் தேதி பாரதி பூங்காவில் பயோகாஸ் வசதியை திறந்து வைக்கிறார் சுவிஸ் சுற்றுச்சூழல் அமைச்சர்

கோவை : கோவையில் பாரதி பூங்காவிற்கு அருகில் வரும் அக்டோபர் 19ம் தேதி பயோகாஸ் வசதியை சுவிட்சர்லாந்தின் சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தித்துறை அமைச்சர் சிமோனெட்டா சோமருகா திறந்து வைக்கிறார்.

கோவை : கோவையில் பாரதி பூங்காவிற்கு அருகில் வரும் அக்டோபர் 19ம் தேதி பயோகாஸ் வசதியை சுவிட்சர்லாந்தின் சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தித்துறை அமைச்சர் சிமோனெட்டா சோமருகா திறந்து வைக்கிறார்.

மொத்தம் 1.5 டன் கொள்ளளவு கொண்ட இந்த பயோகாஸ் கலன், வீடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட கரிம கழிவுகளை கொண்டு மின் சக்தியாக மாற்றுகிறது.

அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்புக்கான சுவிஸ் ஏஜென்சி (எஸ்.டி.சி) நிதியுதவி அளிக்கும் இந்த ஆலை, கேபாசிட்டிஸ் திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் செலவில் செயல்படுத்தப்படுகிறது. இந்த ஆலையில் ஒரு நாளைக்கு 150 கிலோ வாட் வரை மின்சாரம் தயாரிக்க முடியும்.

கோவை மாவட்டத்தை போலவே, அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்புக்கான சுவிஸ் ஏஜென்சி (எஸ்.டி.சி) நாடு முழுவதும் ராஜ்கோட், சிலிகுரி மற்றும் உதய்பூரில் உள்ளிட்ட நகரங்களில் பல்வேறு திட்டங்களைத் தொடங்குகிறது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவுடன் நட்பை தொடர்ந்து வரும் எஸ்.டி.சி, கடந்த 2011 முதல் குறிப்பாக காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினையில் கவனம் செலுத்தி வருகிறது. குறைந்த கார்பன் மற்றும் காலநிலை நெகிழ் திறன், நகர மேம்பாட்டுக்கான திறன் மேம்பாடு (CapaCITIES) என்பது எஸ்.டி.சி யின் திட்டமாகும்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...