கோவை : பணியின்போது வீர மரணம் அடைந்த காவலர்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி கோவை சுங்கம் அருகே உள்ள அம்புரோஸ் கல்லூரியில் நடைபெற்றது.
கோவை : பணியின்போது வீர மரணம் அடைந்த காவலர்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி கோவை சுங்கம் அருகே உள்ள அம்புரோஸ் கல்லூரியில் நடைபெற்றது.
காவல்துறையில் பணியாற்றி, பணியின் போது இறந்த காவலர்களின் வீரத்தினை நினைவூட்டும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 21ம் தேதி வீர வணக்கம் நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சுங்கம் அருகே உள்ள அம்புரோஸ் கல்லூரியில் பணியின் போது வீரமரணம் அடைந்த காவலர்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், மறைந்த காவலர்களை நினைவுகூரும் விதமாக மாணவர்கள் நடனம், ஊமை நாடகம் உள்ளிட்டவற்றை நடத்தினர்.
ராமநாதபுரம் காவல் நிலைய நுண்ணறிவு துறையின் அதிகாரி ஆனந்த், காவலர்கள் நல்லமுத்து, ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்நிகழ்வில், கல்லூரியின் முதல்வர் பீட்டர் ராஜ் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ராமநாதபுரம் காவல் நிலைய ஆய்வாளர் லதா, வீரமரணமடைந்த காவல்துறை அதிகாரிகளுக்கு வீர வணக்கம் செலுத்துதல் பற்றி உரையாடினார். அதேபோல, மாணவச் செல்வங்கள் வருங்கால வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார்.
காவல்துறையில் பணியாற்றி, பணியின் போது இறந்த காவலர்களின் வீரத்தினை நினைவூட்டும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 21ம் தேதி வீர வணக்கம் நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சுங்கம் அருகே உள்ள அம்புரோஸ் கல்லூரியில் பணியின் போது வீரமரணம் அடைந்த காவலர்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், மறைந்த காவலர்களை நினைவுகூரும் விதமாக மாணவர்கள் நடனம், ஊமை நாடகம் உள்ளிட்டவற்றை நடத்தினர்.
ராமநாதபுரம் காவல் நிலைய நுண்ணறிவு துறையின் அதிகாரி ஆனந்த், காவலர்கள் நல்லமுத்து, ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்நிகழ்வில், கல்லூரியின் முதல்வர் பீட்டர் ராஜ் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ராமநாதபுரம் காவல் நிலைய ஆய்வாளர் லதா, வீரமரணமடைந்த காவல்துறை அதிகாரிகளுக்கு வீர வணக்கம் செலுத்துதல் பற்றி உரையாடினார். அதேபோல, மாணவச் செல்வங்கள் வருங்கால வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார்.