நீலகிரி : உதகை மஞ்சூர் சாலையில் மேரிலேண்ட் அருகே கனமழை காரணமாக மிகப்பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி : உதகை மஞ்சூர் சாலையில் மேரிலேண்ட் அருகே கனமழை காரணமாக மிகப்பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தற்பொழுது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக இரவில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வந்தது. பகல் நேரங்களில் மேக மூட்டத்துடன் காணப்படும் வானிலையில் அவ்வப்போது, பகல் நேரங்களிலும் மழை பெய்து வந்தது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் உதகையில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் உள்ள குந்தா பாலம் அருகே கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் சாலையில் விழுந்தன.

மஞ்சூர் சாலையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக மஞ்சூரில் இருந்து உதகை வரும் போக்குவரத்துகளும், உதகையிலிருந்து மஞ்சூர் செல்லும் போக்குவரத்தும் தடைபட்டது.

கனமழையால் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் தற்போது சாலைகளை மாநில நெடுஞ்சாலைத்துறையினர், ஜேசிபி மூலம் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மஞ்சூர் சாலையில் மண்சரிவு ஏற்பட்டால் சீர்செய்ய தயார் நிலையில் ஜேசிபி எந்திரங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
வடகிழக்கு பருவமழை தற்பொழுது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக இரவில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வந்தது. பகல் நேரங்களில் மேக மூட்டத்துடன் காணப்படும் வானிலையில் அவ்வப்போது, பகல் நேரங்களிலும் மழை பெய்து வந்தது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் உதகையில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் உள்ள குந்தா பாலம் அருகே கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் சாலையில் விழுந்தன.

மஞ்சூர் சாலையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக மஞ்சூரில் இருந்து உதகை வரும் போக்குவரத்துகளும், உதகையிலிருந்து மஞ்சூர் செல்லும் போக்குவரத்தும் தடைபட்டது.

கனமழையால் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் தற்போது சாலைகளை மாநில நெடுஞ்சாலைத்துறையினர், ஜேசிபி மூலம் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மஞ்சூர் சாலையில் மண்சரிவு ஏற்பட்டால் சீர்செய்ய தயார் நிலையில் ஜேசிபி எந்திரங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.