நீலகிரியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைத்து தரகோரி சாலை மறியல் ; 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

நீலகிரி : உதகையில் இருந்து நஞ்சநாடு, எடக்காடு, மஞ்சூர் செல்லும் பிரதான சாலையில் மஞ்சனக்கொரை எனும் பகுதியில் சேதமடைந்த சாலையை சரிசெய்து தரவேண்டுமென அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி : உதகையில் இருந்து நஞ்சநாடு, எடக்காடு, மஞ்சூர் செல்லும் பிரதான சாலையில் மஞ்சனக்கொரை எனும் பகுதியில் சேதமடைந்த சாலையை சரிசெய்து தரவேண்டுமென அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் வசிக்கும் பகுதியில், சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இவர்கள் செல்லும் பிரதான சாலையானது குண்டும் குழியுமாக காணப்படுகிறது. பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் இச்சாலை இன்று வரை சரி செய்யப்படாமல் உள்ளதாக தெரிவித்தனர்.

நாள்தோறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பணிக்கு செல்லும் கூலித் தொழிலாளர்கள் வாகனங்கள் செல்லும் போதும், கோடை சீசன் காலத்தில் வாகன நெரிசல் ஏற்படுவதாக கூறினார். இந்த சாலையை, பொதுமக்கள் பிரதான சாலையாக பயன்படுத்துவதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக குண்டும் குழியுமாக உள்ள இச்சாலையை சரி செய்து தர வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.



பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி ஆணையாளர் மற்றும் காவல்துறையினர், இரண்டு நாளில் சாலை அமைப்பதற்கான பணிகள் துவங்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். சாலை மறியலால் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பின் வாகனங்கள் அனைத்தும் அனுமதிக்கப்பட்டன.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...