கோவை : கோவையில் உள்ள குறுந்தொழில் முனைவோருக்கு வங்கிகளில் பண்டிகை கால வங்கிக் கடன் கொடுக்க மறுப்பதாகவும், கடன் கொடுக்க பல்வேறு நிபந்தனைகள் விதிப்பதாக குறுந்தொழில் முனைவோர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவை : கோவையில் உள்ள குறுந்தொழில் முனைவோருக்கு வங்கிகளில் பண்டிகை கால வங்கிக் கடன் கொடுக்க மறுப்பதாகவும், கடன் கொடுக்க பல்வேறு நிபந்தனைகள் விதிப்பதாக குறுந்தொழில் முனைவோர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு குறுந்தொழில் முனைவோர் சங்கத்தினை சேர்ந்த குறுந்தொழில் முனைவோர் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று அதிகாரிகளிடம் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குறுந்தொழில் முனைவோர், கடுமையான தொழில் நெருக்கடியில் கோவை தொழில் முனைவோர் சிக்கியிருக்கும் நிலையில், மத்திய அரசு பண்டிகை கால கடன் வழங்க வங்கி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தி இருந்தும் கோவையில் உள்ள வங்கி நிர்வாகங்கள் கடன் வழங்க மறுப்பதாக புகார் தெரிவித்தனர்.

மேலும், பண்டிகை கால வங்கிக் கடன் கொடுக்க வங்கி நிர்வாகங்கள் பல்வேறு நிபந்தனைகள் விதிப்பதாக குற்றம் சாட்டிய குறுந்தொழில் முனைவோர் சங்கத்தினர், கடுமையான தொழில் நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில், பண்டிகை கால வங்கிக் கடன் கிடைக்கவில்லை எனில் தொழிலாளர்களுக்கு போனஸ் கொடுப்பதில் சிக்கல் ஏற்படும் என்றனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், பண்டிகை கால கடன் கிடைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.