முழு கொள்ளளவை எட்டி சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் ரேலியா அணை ; தடுப்பணை கட்ட கோரிக்கை

நீலகிரி : குன்னூரின் முக்கிய நீராதாரமான ரேலியா அணை முழுமையாக நிரம்பி தண்ணீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடி வீணாகி வருவதால் தடுப்பணை கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி : குன்னூரின் முக்கிய நீராதாரமான ரேலியா அணை முழுமையாக நிரம்பி தண்ணீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடி வீணாகி வருவதால் தடுப்பணை கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



குன்னூர் நகரில் உள்ள 30 வார்டுகளின் முக்கிய குடிநீர் ஆதாரமான ரேலியா அணை அதன் முழு கொள்ளளவான 46.3 அடியை எட்டியதால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குன்னூர் நகராட்சிக்குட்பட்ட 30 வார்டுகளில் பெரும்பாலான வார்டுகளுக்கு குடி நீர் விநியோகம் செய்யும் முக்கிய குடிநீர் ஆதாரமாக ரேலியா அணை உள்ளது.

10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோகித்து வந்த நிலையில், அணைப் பகுதியில் பரவலான மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் 5 முதல் 6 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோக்க வாய்ப்பிருப்பதாகவும், மேலும் பெள்ளட்டி மட்டம், பந்துமை, கரடிப்பள்ளம், கரன்சி உள்ளிட்ட நீர் தேக்கங்களில் குடி நீர் ஆதாரங்களில் போதுமான தண்ணீர் இருப்பதால் இன்னும் சில மாதங்கள் தண்ணீர் பிரச்சினை இல்லாமல் சமாளிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



இந்த நிலையில், அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் இங்குள்ள சாலைகளில் வீணாக செல்வதால் தடுப்பணைக் கட்ட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...