கோவை : தவறான பொருளாதார கொள்கையை கடைபிடிப்பதாக கூறி மத்திய அரசை கண்டித்து சி.பி.எம் மற்றும் சி.பி.ஐ கட்சி சார்பில் கோவை சிவானந்தா காலணி பவர் ஹவுஸ் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை : தவறான பொருளாதார கொள்கையை கடைபிடிப்பதாக கூறி மத்திய அரசை கண்டித்து சி.பி.எம் மற்றும் சி.பி.ஐ கட்சி சார்பில் கோவை சிவானந்தா காலணி பவர் ஹவுஸ் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை காரணமாக வேலையின்மை, விவசாயிகள் தற்கொலை, தொழில் நசிவு ஏற்பட்டு உள்ளதாகவும் இதனையடுத்து நாடு முழுவதும் கண்டன இயக்கங்களை நடத்த இடதுசாரி கட்சிகளின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
இதன் ஒரு பகுதியாக, கோவை சிவானந்தா காலணி பவர் ஹவுஸ் முன்பு சி.பி.எம் மற்றும் சி.பி.ஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இரண்டு கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், ரிசர்வ் வங்கியில் எடுத்த ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடியை பொது முதலீட்டு திட்டங்களுக்கு பயன்படுத்திட வேண்டும், வேலையில்லா இளைஞர்களுக்கு வேலையில்லா கால நிவாரணம் வழங்கிட வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் ரூ18 ஆயிரம் உத்தரவாதம், ராணுவ தளவாட தொழிற்சாலைகள், ரயில்வே, பி.எஸ்.என்.எல், ஏர் இந்தியாவை தனியார் மையப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.