நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகை - குன்னூர் சாலையில் நான்கு இடங்களில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக அந்த வழித்தடத்தில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
`
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக இரவு நேரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆங்காங்கே சிறிய அளவிலான நிலச்சரிவுகள் ஏற்பட்டு வந்தது. இந்த மழையின் காரணமாக குந்தா அருகே ராமசாமி பாலம், தாலுகா அலுவலகம் மற்றும் உதகை குந்தா சாலையில் இரு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக உதகையில் இருந்து மஞ்சூர் பகுதிக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் இரவு நேரத்தில் செல்ல வேண்டாம் என்று போக்குவரத்து காவல் துறையினர் தடை செய்துள்ளனர். மேலும், அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மேலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என போக்குவரத்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், மண் குவியல்களை அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக இரவு நேரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆங்காங்கே சிறிய அளவிலான நிலச்சரிவுகள் ஏற்பட்டு வந்தது. இந்த மழையின் காரணமாக குந்தா அருகே ராமசாமி பாலம், தாலுகா அலுவலகம் மற்றும் உதகை குந்தா சாலையில் இரு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக உதகையில் இருந்து மஞ்சூர் பகுதிக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் இரவு நேரத்தில் செல்ல வேண்டாம் என்று போக்குவரத்து காவல் துறையினர் தடை செய்துள்ளனர். மேலும், அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மேலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என போக்குவரத்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், மண் குவியல்களை அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.