கோவை : கோவை மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை அமைக்க சாலைகள் தோண்டப்பட்டு பணிகள் நிறைவடைந்த நிலையில், முழுமையாக மூடப்படாததால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
கோவை : கோவை மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை அமைக்க சாலைகள் தோண்டப்பட்டு பணிகள் நிறைவடைந்த நிலையில், முழுமையாக மூடப்படாததால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

கோவை இராமநாதபுரம் பகுதியில் பாரதி நகர், காமாட்சியம்மன் கோவில், இந்திரா நகர், ஸ்ரீபதி நகர், ரூபா நகர், வின்சென்ட் சாலை என எல்லா இடங்களிலும் குழிகள் தோண்டப்பட்டு உள்ளதால் அப்பகுதியில் வசிப்பவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக, தாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து பிரதான சாலைக்கு வருவதற்குள் பெரும் அவஸ்தைக்கு உள்ளாகின்றனர். தற்போது, அடிக்கடி மழை பெய்து வருவதால் பெரும்பாலான பகுதிகள் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது.

அதிகப்படியான மக்கள் வசித்து வரும் நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்வோர் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்த பாதாள சாக்கடை திட்டம் முடிவு பெற்றும் சாலை அமைக்காத காரணத்தால், அடிக்கடி வாகனத்தில் இருந்து தவறி விழுவது வாடிக்கை ஆகிவிட்டது. இதனால் மாநகராட்சி உடனடியாக சாலை அமைத்திட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.