உணவு ஆர்டர் விநியோக சம்பள குறைப்பை கண்டித்து ஜொமேட்டோ ஊழியர்கள் போராட்டம்

கோவை : உணவு டெலிவரி செய்யும் ஜோமேட்டோ நிறுவனம் ஒரு உணவு ஆர்டர் விநியோகம் செய்ய 30 ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 25 ரூபாயாக குறைக்கப்பட்டதை கண்டித்து ஜோமேட்டோ ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை : உணவு டெலிவரி செய்யும் ஜோமேட்டோ நிறுவனம் ஒரு உணவு ஆர்டர் விநியோகம் செய்ய 30 ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 25 ரூபாயாக குறைக்கப்பட்டதை கண்டித்து ஜோமேட்டோ ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜொமேட்டோ உணவு வழங்கும் நிறுவனத்தில் கோவையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உணவு பொருட்களை விநியோகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஒரு உணவு ஆர்டர் விநியோகிக்க 40 ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு 30 ரூபாயாக குறைக்கப்பட்டது.



இந்நிலையில், மேலும் 5 ரூபாய் குறைக்கப்பட்டு 25 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டதோடு, கோவையில் ஆறு மண்டலங்களாக உணவு விநியோகிக்கும் பகுதிகளை மூன்றாக குறைக்கப்பட்டது. இதனால் அதிக தூர பயணம், எரிபொருள் செலவு அதிகரிக்கும் நிலையில், கமிஷன் குறைக்கப்பட்டு இருப்பதாக ஜொமேட்டோ ஊழியர்கள் தெரிவித்தனர்.



இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள், இன்று உணவு விநியோகிக்கும் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பந்தயசாலை பகுதியில் உள்ள ஜோமடோ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். போராட்டம் நடத்தியவர்களுடன் ஜோமடோ நிறுவனத்தினர் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...