கருமத்தம்பட்டியில் இளைஞரிடமிருந்து ரூ.50 லட்சம் பறிக்கப்பட்ட சம்பவம் ; முக்கிய குற்றவாளி உட்பட 9 பேர் கைது

கோவை : கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே கத்தியால் குத்தி இளைஞரிடமிருந்து 50 லட்சம் ரூபாய் பணம் பறிக்கப்பட்ட சம்பவத்தில், பணம் இருந்த பையில் வெற்று காகிதங்கள் மட்டுமே இருந்ததுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.


கோவை : கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே கத்தியால் குத்தி இளைஞரிடமிருந்து 50 லட்சம் ரூபாய் பணம் பறிக்கப்பட்ட சம்பவத்தில், பணம் இருந்த பையில் வெற்று காகிதங்கள் மட்டுமே இருந்ததுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த தர்ஷனும் (23) சுங்கம் பகுதியை சேர்ந்த ராகுல் குமாரும் (23) இணைந்து சாயிபாபாகாலனியில் தொழில் நிறுவனம் நடத்தி வருகின்றனர். இவர்கள், நேற்று முன்தினம் இரவு, கணியூர் சுங்கச்சாவடி அருகே வந்த போது, மர்மநபர்கள் இவரது வாகனத்தை இடித்து விட்டு, ராகுல்குமாரை கத்தியால் வெட்டி அவரிடம் இருந்த ரூ.50 லட்சம் தொகை இருந்த கைப்பையை பறித்துச் சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனிதா, துணை கண்காணிப்பாளர் பாலமுருகன் ஆகியோர் அடங்கிய குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில் தர்ஷனும், ராகுல் குமாரும் தொழில் முன்னேற்றத்திற்காக திருப்பூரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரை அணுகி உள்ளனர். இதில் பிரபாகரன் ரூ.50 லட்சம் கடன் தருவதாக கூறி, சொத்து பத்திரமும் கடன் பரிமாற்ற கட்டணமாக இரண்டு லட்சத்து 50 ஆயிரம் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 14-ம் தேதி பிரபாகரன் திருப்பூரில் வைத்து ஒரு பேக்கை ராகுல் குமாரிடம் கொடுத்து அதில் ரூ.30 லட்சம் ரொக்கமும், ரூ.20 லட்சத்துக்கான காசோலையும் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதை நம்பி அந்த பேக்கை வாங்கிக் கொண்டு இருவரும் இருசக்கர வாகனத்தில் கோவை நோக்கி வந்த போது, கத்தியால் குத்தி பணம் பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாக பிரபாகரன் மற்றும் அவரது கூட்டாளிகள் என சந்தேகித்த போலீசார், தற்போது ஆறு பேரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், பறிக்கப்பட்ட அந்த பேக்கில் ரூ.30 லட்சத்துக்கு சில அசல் ரூபாய் நோட்டுகளும், பெரும்பாலானவை வெள்ளை பேப்பர் வைக்கப்பட்டு இருப்பதும் விசாரணையில் தெரியவந்ததுள்ளது.



இந்த நிலையில், முக்கிய குற்றவாளியான திருப்பூரைச் சேர்ந்த பிரபாகரன் உட்பட 9 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...