கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் கடும் வெயில் சுட்டெரித்த நிலையில், மதியத்துக்கு மேல் வானத்தில் கருமேகம் சூழ்ந்து இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் இடைவிடாமல் கொட்டி தீர்த்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் கடும் வெயில் சுட்டெரித்த நிலையில், மதியத்துக்கு மேல் வானத்தில் கருமேகம் சூழ்ந்து இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் இடைவிடாமல் கொட்டி தீர்த்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேட்டுப்பாளையம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளான காரமடை,சிறுமுகை, தோலம்பாளையம், வெள்ளியங்காடு, ஆலாங்கொம்பு, நெல்லித்துறை ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நீலகிரி மாவட்டத்தின் அடிவார பகுதியாக இருந்தாலும் மேட்டுப்பாளையத்தை பொருத்தவரை வடகிழக்கு பருவமழையே அதிக அளவில் இருக்கும்.
இந்த நிலையில், வரும் 17ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழையானது துவங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், மேட்டுப்பாளையத்தில் முன் கூட்டியே துவங்கிய பருவமழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளான காரமடை,சிறுமுகை, தோலம்பாளையம், வெள்ளியங்காடு, ஆலாங்கொம்பு, நெல்லித்துறை ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நீலகிரி மாவட்டத்தின் அடிவார பகுதியாக இருந்தாலும் மேட்டுப்பாளையத்தை பொருத்தவரை வடகிழக்கு பருவமழையே அதிக அளவில் இருக்கும்.
இந்த நிலையில், வரும் 17ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழையானது துவங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், மேட்டுப்பாளையத்தில் முன் கூட்டியே துவங்கிய பருவமழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.