கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் அடர்ந்த வனப்பகுதியில் வாழும் காடர், முதுவர், புலையர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த ஆதிவாசி மக்களின் குழந்தைகளின் கல்வித்தரத்தை உயர்த்த, உண்டு உறைவிட பள்ளி இயங்கி வருகிறது. அரசு உதவியுடன் தனியார் சேவை மையத்தால் நடைபெற்று வருகிறது.
கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் அடர்ந்த வனப்பகுதியில் வாழும் காடர், முதுவர், புலையர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த ஆதிவாசி மக்களின் குழந்தைகளின் கல்வித்தரத்தை உயர்த்த, உண்டு உறைவிட பள்ளி இயங்கி வருகிறது. அரசு உதவியுடன் தனியார் சேவை மையத்தால் நடைபெற்று வருகிறது.

இந்த பள்ளியில் வால்பாறை பகுதியிலுள்ள ஆதிவாசி செட்டில்மென்டைச்சேர்ந்த 120 மாணவ, மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர். இவர்களுக்கு உணவு, தங்குமிடம், கல்வி இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த குழந்தைகளின் கல்வியை ஊக்கப்படுத்த வால்பாறை நகராட்சி சார்பில் குழந்தைகளின் பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள டிரங்க் பெட்டியை நகராட்சி ஆணையாளர் சரவணபாபு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள், நகராட்சி அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த பள்ளியில் வால்பாறை பகுதியிலுள்ள ஆதிவாசி செட்டில்மென்டைச்சேர்ந்த 120 மாணவ, மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர். இவர்களுக்கு உணவு, தங்குமிடம், கல்வி இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த குழந்தைகளின் கல்வியை ஊக்கப்படுத்த வால்பாறை நகராட்சி சார்பில் குழந்தைகளின் பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள டிரங்க் பெட்டியை நகராட்சி ஆணையாளர் சரவணபாபு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள், நகராட்சி அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.