தென்மாவட்டங்களுக்கு இரயில் சேவை கோரி வரும் அக்., 22ல் கையெழுத்து இயக்கம் : பி.ஆர்.நடராஜன் எம்.பி

கோவை : கோவையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 23ம் தேதி கோவை ரயில் நிலையம் முன்பு கையெழுத்து இயக்கம் நடத்த இருப்பதாக "கோவை- பழனி" பயணிகள் ரயில் சேவை துவக்க விழாவில் கலந்து கொண்ட கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தெரிவித்தார்.

கோவை : கோவையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 23ம் தேதி கோவை ரயில் நிலையம் முன்பு கையெழுத்து இயக்கம் நடத்த இருப்பதாக "கோவை- பழனி" பயணிகள் ரயில் சேவை துவக்க விழாவில் கலந்து கொண்ட கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தெரிவித்தார்.



இதனைத் தொடர்ந்து பேட்டியளித்த கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி .ஆர். நடராஜன், கோவையில் இருந்து ராமேஸ்வரம், மதுரை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளுக்கு கடந்த காலங்களில் இயக்கப்பட்டதை போல மீண்டும் ரயில் சேவை இயக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

இதேபோன்று, கோவை - பெங்களூரு இடையே இரவு நேர ரயில் சேவையும் துவங்க வேண்டும் என வலியுறுத்தி இருப்பதாகவும் சேலம் ரயில்வே கோட்டம் இந்த 4 ரயில்களையும் விரைவில் இயக்க வேண்டும் என வலியுறுத்தியும், இந்த பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தும் விதமாக வரும் 23ம் தேதி கோவை ரயில் நிலையம் முன்பாக கையெழுத்து இயக்கம் நடத்த இருப்பதாகவும் மக்களவை உறுப்பினர் பிஆர் நடராஜன் தெரிவித்தார்.

மீட்டர் கேஜ் பாதையாக இருந்ததை அகல ரயில் பாதையாக மாற்றிய பின்னர் தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில் இயக்கப்பட வேண்டும் என்பது கோவை மக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.



இந்நிகழ்ச்சியில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர் பாலசுப்ரமணியம், கோவை - ராமேஸ்வரம் இடையிலான பயணிகள் ரயிலை உடனடியாக துவங்க ரயில்வே துறையும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...